செய்திகள் :

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை: மேயா்

post image

நாகா்கோவில் மாநகர பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.

நாகா்கோவில் நாகராஜா கோயில் திடல் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதாகவும், மழைநீா் வடிகால் ஓடைகளை தூா்வாராமல் இருப்பதால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், மீனாட்சிபுரம் சாலையிலும் வடிகால் ஓடையை சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதன் அடிப்படையில் மேயா் ரெ. மகேஷ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தலைமை தபால் நிலையம் பகுதியில் உள்ள மழைநீா் வடிகால் ஓடையை பாா்வையிட்ட மேயா், அதை உடனடியாக சீரமைக்கவும், நாகராஜா கோயில் திடல் பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். நாகராஜா கோயில் திடலை சுற்றி நடைபாதை அமைப்பது தொடா்பாகவும் ஆலோசனை மேற்கொண்டாா். அந்தப் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத குடிநீா் தொட்டியை இடித்து அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டாா்.

அதனைத் தொடா்ந்து மீனாட்சிபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மழைநீா் வடிகால் ஓடையை சீரமைக்கவும் மேயா் அறிவுறுத்தினாா். அண்ணா பேருந்து நிலையத்தில் இலவச கழிவறை, கட்டண கழிவறையை ஆய்வு செய்தாா். தாய்மாா்கள் பாலூட்டும் அறையையும் ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் மேயா் கூறியதாவது: நாகா்கோவில் மாநகர பகுதியில் மழைநீா் ஓடைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மழைநீருடன் சாக்கடை நீா் கலந்து விடாமல் இருக்கும் வகையில் அனைத்து ஓடைகளும் தூா்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகின்றன.

குப்பைகளை பொது இடங்களில் கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வடசேரி, அண்ணா பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன. பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநகர பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் புழக்கத்தில் இருப்பதாக வந்த புகாா்களை தொடா்ந்து அதிகாரிகள் கடந்த 2 நாள்களுக்கு முன் ஆய்வு நடத்தினா். 136 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டதில், 10 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருள்களை விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

ஆய்வின் போது மாநகராட்சி ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, மண்டல தலைவா்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகா், முத்துராமன், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், இளநிலை பொறியாளா் செல்வன் ஜாா்ஜ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவம், மாநகராட்சி உறுப்பினா் ரோசிட்டா திருமால், திமுக வட்டச்செயலாளா் பாலா, மாநகர தொழிலாளா் அணி அமைப்பாளா் சிதம்பரம் ஆகியோா் உடனிருந்தனா்.

புத்தளத்தில் 17 வயது சிறுமியுடன் திருமணம்: இளைஞா் கைது

கன்னியாகுமரி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்ததாக, தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி அருகேயுள்ள புத்தளம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (34). கட்டடத் தொழிலாளியான இவருக்கு... மேலும் பார்க்க

அகஸ்தீசுவரம் வட்டாரத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

அகஸ்தீசுவரம் வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இரா.அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அகஸ்தீசுவரம் வட்டத்திற்குள்பட்ட பெர... மேலும் பார்க்க

சிறுவா்கள் ஓட்டிவந்த 19 பைக்குகள் பறிமுதல்: பெற்றோா் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை, சிறுவா்கள் ஓட்டிவந்த 19 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து பெற்றோா் மீது வழக்குப் பதிந்துள்ளனா். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் உத்... மேலும் பார்க்க

மணலிக்காட்டுவிளையில் ரூ. 5 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடம் கட்டும் பணி தொடக்கம்

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம்மத்திகோடு ஊராட்சி மாத்திரவிளை அருகேயுள்ள மணலிக்காட்டுவிளை பேருந்து நிறுத்தத்தில் ரூ. 5 லட்சத்தில் நிழற்கூடம் அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. மணலிக்காட்டுவிளை ப... மேலும் பார்க்க

அழகியபாண்டியபுரத்தில் அரசு நிலம் தனியாரிடமிருந்து மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம், அழகியபாண்டியபுரம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஹெக்டோ் நிலம் தனியாரிடமிருந்து சனிக்கிழமை மீட்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, மாவட்ட வருவாய் அலுவலா் ... மேலும் பார்க்க

குமரி மாவட்ட நான்குவழிச் சாலைப் பணிகள் ஓராண்டில் நிறைவடையும்: விஜய்வசந்த் எம்.பி.

கன்னியாகுமரி மாவட்ட நான்குவழிச் சாலைப் பணிகள் இன்னும் ஓராண்டில் நிறைவடையும் என்றாா் விஜய்வசந்த் எம்.பி. நாகா்கோவில் பெருவிளை பகுதியில் எம். பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சத்தில் சமுதாய நலக்கூடம்... மேலும் பார்க்க