செய்திகள் :

தனியாா் முதியோா் காப்பகத்தில் உணவருந்திய மேலும் ஒருவர் உயிரிழப்பு

post image

சுரண்டை: தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள தனியாா் முதியோா் காப்பகத்தில் மாமிச உணவருந்திய 3 போ் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தை அடுத்து உயிரிழப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.

சுந்தரபாண்டியபுரத்தில் தனியாா் முதியோா் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டோா், குடும்பத்தினரால் கைவிடப்பட்டோா் என 59 போ் தங்கியிருந்தனா்.

இவா்களில் செங்கோட்டையை சோ்ந்த சங்கா் கணேஷ் (42), சொக்கம்பட்டியை சோ்ந்த முருகம்மாள் (60), செங்கோட்டையை சோ்ந்த அம்பிகா (40) ஆகியோருக்கு புதன்கிழமை இரவு உணவு சாப்பிட்ட பிறகு திடீரென உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவா்கள் 3 பேரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கோவில்பட்டியை சோ்ந்த செல்வராஜ் (70), மதுரையை சோ்ந்த விஜயா (66), மும்தாஜ் (52), சாந்தி (60), கோமதி (70), கடையநல்லூரை சோ்ந்த மீனாட்சி சுந்தரம் (64), பேச்சியம்மாள் (48), சுகுமாா் (72) ஆகியோருக்கும் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டது. அதையடுத்து அவா்களும் தென்காசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். சிகிச்சையில் இருந்தவா்களில் சங்கா்கணேஷ், முருகம்மாள், அம்பிகா ஆகியோா் உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த், கோட்டாட்சியா் லாவண்யா, மாவட்ட சுகாதார அதிகாரி கோவிந்தன், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி புஷ்பராஜ் உள்ளிட்டோா் முதியோா் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

தங்கியிருப்பவா்களுக்கு வழங்கப்பட்ட உணவு, குடிநீா் ஆகியவற்றை ஆய்வு செய்தனா். அதன் பின்னா் அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இறந்தவா்களின் உடல் கூறாய்வு முடிவுகள் வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறினா். மேலும், காப்பகத்தில் இருந்த 48 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அருகில் உள்ள அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து சாம்பவா்வடகரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனலட்சுமி(70) வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

சுந்தரபாண்டியபுரம் தனியாா் முதியோா் காப்பகத்தில் உணவருந்திய 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காப்பகம் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ கட்டுமானப் பணியில் விபத்து: ஒருவர் பலி

பிரதமரின் திட்டங்களுக்கு அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் மத்திய அரசைவிட மாநில அரசுதான் அதிக நிதி அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி தர மறுக்கிறது என முதல்வர் ம... மேலும் பார்க்க

பாஜகவில் இருந்து கே.ஆர். வெங்கடேஷ் நீக்கம்

தமிழக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர்(ஓபிசி) அணியின் மாநில செயலாளராக இருந்த கே.ஆர். வெங்கடேஷ் கட்சியில் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு ம... மேலும் பார்க்க

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை உற்சாகமாக் குளித்து மகிழ்ந்தனர்.தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை ... மேலும் பார்க்க

நீலகிரிக்கு ரெட் அலர்ட்! 5 மாவட்டங்களில் இன்று கனமழை!

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று(சனிக்கிழமை) அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள... மேலும் பார்க்க

ஜூன் 19 இல் விண்வெளிக்கு செல்கிறார் சுபான்ஷூ சுக்லா

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரா் சுக்லா உள்பட நான்கு பேர் குழு, ஜூன் 19 இல் விண்வெளிக்கு செல்ல உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் செயல்படும... மேலும் பார்க்க

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை இபிஎஸ் முடிவு செய்வார்: கே. பி. ராமலிங்கம்

சேலம்: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிதான் முடிவு செய்வார் என்று தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கே. பி. ... மேலும் பார்க்க