செய்திகள் :

தமிழகத்தில் தனிநபருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்: ஜி.கே.வாசன்

post image

தமிழகத்தில் தனிநபருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுவதாக தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி வெளாங்காட்டு வலசு பகுதியில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதிகளான ராமசாமி - பாக்கியம்மாள் கொலை செய்யப்பட்டது அதிா்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அரசின் கட்டுக்குள் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

தொடா்ந்து பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. தனிநபருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது. தமிழக முதல்வா் கட்டுப்பாட்டிலுள்ள காவல் துறை என்ன செய்துகொண்டு இருக்கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவா்களுக்கு அதிகபட்ச தண்டனையை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

சிந்தாதிரிப்பேட்டையில் ரூ. 2.9 கோடியில் புதிய மீன் அங்காடி!

சிந்தாதிரிப்பேட்டையில் புதிய மீன் அங்காடியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் ரூ. 2.92 கோடி மதிப்பீட்ட... மேலும் பார்க்க

குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு... முக்கிய அறிவிப்பு!

சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற மே 10 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்நடைபெறவுள்ளது.பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு... மேலும் பார்க்க

சென்னையில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது!

சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது.பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், நாட்டில் வியூக ரீதியில் முக்கியத்துவம்... மேலும் பார்க்க

வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடைக்கால முகாம்

வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: நிகழாண்டு கோடை விடுமு... மேலும் பார்க்க

சாலையில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய நாய்

சென்னை, வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் 6 வயது சிறுவன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டினா் வளா்க்கும் நாய் கடித்ததில், அச்சிறுவன் படுகாயம் அடைந்தான். வளசரவாக்கம் அடுத்த க... மேலும் பார்க்க

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை சைதாப்பேட்டை, தி. நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர் ஆகிய பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.பில்ரோத் மருத்துவமனை உர... மேலும் பார்க்க