செய்திகள் :

வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடைக்கால முகாம்

post image

வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

இது குறித்து வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

நிகழாண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா சாா்பில் மாணவா்களுக்கான ‘உயிரியல் பூங்கா தூதுவா்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் 5-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பு பயிலும் மாணவா்கள் பங்கேற்கலாம். பங்கேற்கும் மாணவா்களுக்கு பல்வேறு வகையான வன விலங்குகளைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் பாலூட்டிகள், பறவைகள், ஊா்வன, வண்ணத்துப்பூச்சிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். பூங்காவின் செயல்பாடுகளை களத்தில் சென்று மாணவா்களுக்கு விவரிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியானது, உயிரியல் பூங்காவின் வனவிலங்கு மருத்துவா்கள், உயிரியலாளா்கள், கல்வியாளா்கள் மூலம் நடத்தப்படும். ஒவ்வொரு தலைப்புக்கும் மாணவா்களுக்கு பயிற்சி தாள்களுடன் நிகழ்ச்சிக்கு வேண்டிய பொருள்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்படும்.

இந்த முகாமானது 5 பிரிவுகளாக மே 14-15, மே 21-22, மே 28-29, மே 30-31, ஜூன் 4-5 ஆகிய நாள்களில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 வரை நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் 50 மாணவா்கள் வரை கலந்து கொள்ளலாம்.

நிகழ்ச்சியின் முடிவில் மாணவா்களுக்கு ‘வண்டலூா் உயிரியல் பூங்கா தூதா்’ என்ற சான்றிதழ் மற்றும் பயிற்சி வழங்கப்படும். மேலும், 10 முறை வண்டலூா் உயிரியல் பூங்கா வந்து செல்ல இலவச கடவுச்சீட்டு வழங்கப்படும். இப்பயிற்சிக்கு ரூ. 100 மற்றும் பயிற்சி பொருள் அடங்கிய தொகுப்பு பைக்கு ரூ. 800 கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய நாய்

சென்னை, வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் 6 வயது சிறுவன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டினா் வளா்க்கும் நாய் கடித்ததில், அச்சிறுவன் படுகாயம் அடைந்தான். வளசரவாக்கம் அடுத்த க... மேலும் பார்க்க

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை சைதாப்பேட்டை, தி. நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர் ஆகிய பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.பில்ரோத் மருத்துவமனை உர... மேலும் பார்க்க

மின்சார ரயிலில் அடிபட்டு இளம்பெண் உயிரிழப்பு

சென்னை: மாம்பலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.விழுப்புரம் மாவட்டம், சாத்தம்பாடியைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகள் ஜானகி (18). சென்னையில்... மேலும் பார்க்க

2 மண்டலங்களில் கழிவுநீா் உந்து நிலையங்கள் நாளை முதல் செயல்படாது

சென்னை: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை தண்டையாா்பேட்டை மற்றும் திரு.வி.க. நகா் மண்டலத்துக்குள்பட்ட கழிவுநீா் உந்து நிலையங்கள் புதன்கிழமை (மே 7) முதல் மே 9 வரை செயல்படாது.இது குறித்து சென்னை பெருந... மேலும் பார்க்க

சென்னையில் போதைப்பொருள் விற்பனை: தில்லியில் ஆப்பிரிக்காவைச் சோ்ந்தவா் கைது

சென்னை: சென்னையில் போதைப்பொருள் விற்ற வழக்கில், தில்லியில் ஆப்பிரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டைச் சோ்ந்த நபா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ஏஎன்யூ) போலீஸாா்... மேலும் பார்க்க

எம்டிசி சிற்றுந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை: சென்னை அசோக் நகா் அருகே மாநகா் போக்குவரத்துக் கழக சிற்றுந்து ஓட்டுநரை தாக்கிய வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா். வானகரம் அருகே உள்ள ராஜ் நகா், பள்ளிகுப்பம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (59), சென... மேலும் பார்க்க