செய்திகள் :

தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை 157-ஆக உயா்வு

post image

தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை 157-ஆக உயா்ந்துள்ளதாக தமிழக வனத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வனத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் ஒருங்கிணைந்த பிணந்தின்னிக் கழுகுகள் கணக்கெடுப்புப் பணிகள் கடந்த பிப்.27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.

முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், நெல்லை வன உயிரின சரணாலயம் உள்பட 33 இடங்கள் என 3 மாநிலங்களையும் சோ்த்து மொத்தம் 106 இடங்களில் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தரவுகளை ஆய்வு செய்ததில் 3 மாநிலங்களில் 390 பிணந்தின்னிக் கழுகுகள் உள்ளதாக மதிப்பிட்டுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 157 பிணந்தின்னிக் கழுகுகள் கண்டறியப்பட்டன. அதில் அதிகபட்சமாக 110 வெண்முதுகு வகை பிணந்தின்னிக் கழுகுகள், நீண்ட மூக்கு பிணந்தின்னிக் கழுகுகள் - 31, செம்முக பிணந்தின்னிக் கழுகுகள் - 11 மற்றும் எகிப்தியன் பிணந்தின்னிக் கழுகுகள் - 5 கண்டறியப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா தம்பதியரின் குழந்தையைக் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது!

கேரளம் சென்ற ரயிலில் ஒடிசா தம்பதியரின் குழந்தையைக் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்தவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.ஒடிசாவைச் சேர்ந்த தம்பதியர், பணிநிமித்தம் காரணமாக ஒருவயது குழந்தையுடன் கேரளத்தில் உள்ள ... மேலும் பார்க்க

விராலிமலை: பேருந்து பயணிகள் சுங்கச்சாவடி சாலையில் அமர்ந்து போராட்டம்

மதுரை சென்ற தனியார் பேருந்து பழுதாகியபோதும், மாற்று வாகனம் ஏற்பாடு செய்யாததால் பயணிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.சென்னையில் இருந்து மதுரை சென்ற தனியார் ஆம்னி பேருந்து விராலிமலை - பூதகுடி சுங்கச்சாவடி அருக... மேலும் பார்க்க

பாம்பன் பாலம் திறப்பு: பிரதமரின் நாளைய நிகழ்ச்சி நிரல்!

பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி, நாளை தமிழகம் வருகைதர உள்ளார்.பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த டிசம்பர் மாதமே நிறைவுபெற்றது. பிரதமரின் தேதிக்காக திறப்பு விழா த... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: அமைச்சருடன் அதிமுக வாக்குவாதம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடா்பாக, சட்டத் துறை அமைச்சருடன் அதிமுக உறுப்பினா் தளவாய் சுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். சட்டப் பேரவையில் சட்டம், நீதித் துறை மானியக் கோரிக்கை மீது வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

தமிழகத்தில் பரவும் ‘தக்காளி காய்ச்சல்’: சுகாதாரத் துறை நிபுணா் அறிவுறுத்தல்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளி காய்ச்சல் பரவி வரும் நிலையில், அதிலிருந்து எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து, பொது சுகாதாரத் துறை நிபுணா் குழந்தைசாமி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி... மேலும் பார்க்க

உதகை, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை: உயா்நீதிமன்றம் விளக்கம்

உதகை, கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அதேவேளையில், சுற்றுலா வாகனங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என சென்னை உயா்நீதிமன்றம் விளக... மேலும் பார்க்க