செய்திகள் :

தமிழகத்தில் மதவாதம் எங்கு இருக்கிறது? மு.க. ஸ்டாலின் - வானதி சீனிவாசன் காரசார வாதம்!

post image

தமிழ்நாட்டில் மதவாத எதிர்ப்பு சக்தி எங்கு இருக்கிறது? எப்படி, எந்த சூழலில் இருக்கிறது என்று சொல்லுங்கள்? என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று, கோவையில் காரில் குண்டுவெடித்த சம்பவத்தைக் குறிப்பிட்டு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசினார். மேலும், ஆடிட்டர் ரமேஷ் கொலை பற்றி சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் மதவாத சக்திகள் எந்த ரூபத்திலும் உள்ளே நுழைய முடியாது என்றும், கோவையில் நடந்த சம்பவம் உண்மைதான், ஆனால் உடனடியாக அமைதி நிலைநிறுத்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.

பேரவையில் பேசிய வானதி சீனிவாசன், ஆடிட்டர் ரமேஷ் கொலை பற்றி சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார். ஆடிட்டர் ரமேஷ் கொலை அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்தது என்று முதல்வர் பதிலளித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் மதவாத எதிர்ப்பு சக்தி எங்கு இருக்கிறது? எப்படி எந்த சூழலில் இருக்கிறது என்று சொல்லுங்கள். உங்களுடைய பாஜக ஆளும் மாநிலங்களில் என்னவெல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். எந்தக் காரணத்தையும் கொண்டு தமிழகத்துக்குள் மதவாதம் நுழைய முடியாது. காஷ்மீர் போன்று தமிழ்நாட்டில் எதுவும் நடக்காது. காஷ்மீர் பிரச்னையில் கூட மத்திய அரசின் பாதுகாப்புக் குறைபாடு குறித்து நாங்கள் பேசவில்லை. மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்றுதான் பேசியிருந்தோம் என்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், மத்தியில் ஆளும் பாஜக அரசிடம் பேசி தமிழகத்துக்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொடுக்குமாறும் வானதி சீனிவாசனை வலியுறுத்தினார்.

மே 3 -ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மே 3ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மே 3, சனிக்கிழமை காலை... மேலும் பார்க்க

மீண்டும் அமைச்சரானார் மனோ தங்கராஜ்!

தமிழக அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்.அமைச்சர் மனோ தங்கராஜுக்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார்.இந்த நிகழ்வில் முதல்வர... மேலும் பார்க்க

மாவட்ட நீதிபதிகள் 77 பேர் மாற்றம்! பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு தேதி வெளியான நிலையில்!!

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு தேதி வெளியான நிலையில், கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி உள்பட தமிழகத்தில் 77 மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பொள்ளாச்சி பாலியல் வழ... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூா் இடையே ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை: பூந்தமல்லி - போரூா் இடையே ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இரண்டாம் நாளாக இன்றும் நடத்தப்படுகிறது.சென்னையில் ஏற்கனவே முதல்கட்ட மெட்ரோ வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 2... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: மே. 13-ல் தீர்ப்பு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13 ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து விடியோ எடுத்து... மேலும் பார்க்க

காவலர்களுக்கான வார விடுமுறை: முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால் சில வேளைகளில் வார விடுமுறை அளிக்க முடியாமல் போய்விடுகிறது. அது உண்மைதான் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.தமிழ்நாடு சட்டப் பேரவையி... மேலும் பார்க்க