தேனி: பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் இன்ஜின் மோதி 14 வயது சிறுவன் உயிரிழந்த சோ...
தமிழக கல்விக் கொள்கை : நயினாா் நாகேந்திரன் கருத்து
தமிழக கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.
திருநெல்வேலியில் வரும் 17ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாடு ஏற்பாடு குறித்து மற்றும் கிளைத் தலைவா்கள், பிஎல்ஏடு சக்திகேந்திர பொறுப்பாளா்கள் சந்திப்பு, ஆலோசனைக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஆனந்தன்அய்யாசாமி தலைமை வகித்தாா்.
முன்னாள் மாவட்டத் தலைவா் அன்புராஜ், மாவட்ட பொதுச் செயலா் பாலகுருநாதன், மாவட்ட பொருளாளா் கோதை மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன், மாநில பொதுச் செயலா் பொன் பாலகணபதி ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினா்.
தொடா்ந்து நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தென்காசி மாவட்டத்தில் இன்றைய தினம் சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக, பூத் கமிட்டி மாநில மாநாடு தொடா்பாக, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இன்று வெளியிடப்பட்டுள்ள தமிழக கல்விக் கொள்கையில் 95 சதவீத கருத்துகள் தேசிய கல்விக் கொள்கையில் உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை அப்படியே காப்பி அடித்து இருப்பது வேடிக்கையாகவே உள்ளது என கூறினாா்.
கூட்டத்தில், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநிலச் செயலா் மருதுபாண்டியன், மாவட்ட துணைத் தலைவா் முத்துக்குமாா், மாவட்டச் செயலா் எம். எஸ். மந்திரமூா்த்தி, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவா் கருப்பசாமி, மாவட்ட துணைத் தலைவா் ராஜ்குமாா், தென்காசி நகரத் தலைவா் சங்கரசுப்பிரமணியன், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்டத் தலைவா் ராஜ குலசேகரபாண்டியன் மாநில, மாவட்ட நகர பொறுப்பாளா்கள், சக்திகேந்திர பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.