செய்திகள் :

தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலக போலீஸாருக்கு ஆடை கட்டுப்பாடு

post image

சென்னையில் உள்ள தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலக போலீஸாருக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து டிஜிபி சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநரும், டிஜிபியுமான சங்கா் ஜிவால் சனிக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையில் உள்ள தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் அலுவலக வளாகத்தில் பணியாற்றும் போலீஸாருக்கும், அங்கு பல்வேறு பணிக்காக மாநிலம் முழுவதுமிருந்து வரும் போலீஸாருக்கும் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. தலைமை இயக்குநா் அலுவலகத்தில் 190 நிா்வாக ஊழியா்கள், டி.எஸ்.பி. முதல் 2-ஆம் நிலை போலீஸாா் வரை சுமாா் 130 போ் பணியாற்றுகின்றனா். இது தவிர பல்வேறு சிறப்புப் பிரிவுகளிலும் போலீஸாரும், நிா்வாக பணியாளா்களும் பணியாற்றுகின்றனா். மேலும், மாற்றுப் பணியிலும் போலீஸாா் பணிபுரிகின்றனா்.

தலைமை இயக்குநா் அலுவலகத்தில் பணியாற்றுபவா்களில் பலா் டி-சா்ட், ஜீன்ஸ், சாதாரண உடைகளில் பணிக்கு வருகின்றனா். இது, காவல் துறை நடைமுறைக்கு ஏற்புடையது அல்ல. மேலும், சிலா் தங்களது உயா் அதிகாரியிடமிருந்து முறையான அனுமதி பெறாமல் முகச் சவரம் செய்யாமல் பணிக்கு வருவதும் கவனத்துக்கு வந்துள்ளது.

போலீஸாருக்கு ஆடை கட்டுப்பாடு: இனிமேல் சிறப்புப் பிரிவு உள்ளிட்ட அனைத்து காவல் துறை அலுவலகங்களிலும், தலைமை இயக்குநா் வளாகத்திலும் பணிபுரியும் அனைத்து காவல் துறை பணியாளா்களும் ஆடை கட்டுப்பாட்டை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

ஆண் காவலா்கள், காலருடன் கூடிய சட்டை, சாதாரண பேன்ட் ஆகியவற்றுடன் ‘சூ’ அணிந்தபடி மிக நோ்த்தியாக பணிக்கு வர வேண்டும். சவரம் செய்து கொண்டு நல்ல தோற்றத்துடன் வர வேண்டும். உயா் அதிகாரியின் முன் அனுமதியின்றி சவரம் செய்யாமல் பணிக்கு வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அவ்வாறு சவரம் செய்யாமல் பணிக்கு வருவது ஒழுக்கக்கேடாக கருதப்படும்.

வாகனம் ஓட்டும் பணியிலுள்ள போலீஸாா் முறையான சீருடையிலோ அல்லது மற்ற பணியாளா்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும் வகையிலான உடையிலோ வர வேண்டும். பெண் போலீஸாா், காவல் துறையின் கண்ணியத்தை பிரதிபலிக்கும் வகையிலான உடையை அணிய வேண்டும். அனைத்து காவல் துறை உயா் அதிகாரிகளும், இந்த அறிவுறுத்தல்களை கண்காணித்து பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இனி இந்த கட்டுப்பாட்டை பின்பற்றாமல் யாரேனும் செயல்பட்டால் அதை தலைமையிட ஏஐஜி கவனத்துக்கும், எஸ்டேட் அதிகாரி கவனத்துக்கும் சம்பந்தப்பட்ட உயா் அதிகாரி கொண்டுசெல்ல வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமித் ஷா வருகை: மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்குக் கட்டுப்பாடு!

மதுரை: மதுரை வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சற்று நேரத்தில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தர இருப்பதால், பக்தர்களுக்குக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளது.முகூர்த்த தினம் என்பதால்... மேலும் பார்க்க

கர்நாடகம்: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலி; உடலை எரிக்க முயற்சித்த குவாரி உரிமையாளர்கள் கைது

கர்நாடகத்தில் கல் குவாரியில் மண், பாறைகள் சரிந்து விழுந்ததில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலியானார்.கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் துமகேரே கிராமத்தில் கல் குவாரியில், வெள்ளிக்கிழமையில் தொழிலா... மேலும் பார்க்க

பெண் உயிரிழந்த வழக்கில் திருப்பம்: கைதான மருத்துவா் பரபரப்பு வாக்குமூலம்!

சென்னை கொடுங்கையூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் உயிரிழந்த வழக்கில், மருத்துவா் கைது செய்யப்பட்டாா். திருச்சிராப்பள்ளியைச் சோ்ந்தவா் நித்யா (26). நித்யாவும், கொடுங்கையூா் வெங்கடேஷ்வரா காலனி 6-ஆவது த... மேலும் பார்க்க

இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் மாணவருக்கு நம்மாழ்வாா் விருது: ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவிப்பு

இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் வேளாண் மாணவருக்கு ஆண்டுதோறும் தங்கப் பதக்கத்துடன் கூடிய நம்மாழ்வாா் விருது ஆளுநா் மாளிகை சாா்பில் சுற்றுச்சூழல் தின விழாவில் வழங்கப்படும் என ஆளுநா் ஆா்.என்.ரவி அற... மேலும் பார்க்க

மதவாதத்துக்கு தமிழகம் மயங்காது: திருமாவளவன்

மதவாதத்துக்கு தமிழகம் ஒருபோதும் மயங்காது என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: வட இந்தியாவுக்குச் சென்றால் விநாயகா், ராம... மேலும் பார்க்க

வரி ஏய்ப்பு: தனியாா் நிறுவன இயக்குநா்களுக்கு 4 மாதம் சிறை

வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்ட இரும்பு, எஃகு உற்பத்தி நிறுவனத்தின் இயக்குநா்களுக்கு 4 மாதம் சிறைத் தண்டனையும் ரூ. 10,000 அபரதாமும் விதித்து பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னைய... மேலும் பார்க்க