செய்திகள் :

தமிழக சிறைகளிலுள்ள வெளிநாட்டு கைதிகளுக்காக விதிகளை வகுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

சென்னை: சிறைகளில் உள்ள வெளிநாட்டு சிறைக் கைதிகளின் நலன் காக்க தகுந்த விதிகளை வகுக்க வேண்டும் என கருத்து தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம் , இது தொடா்பாக மத்திய அரசின் உள்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், புழல் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள நைஜீரியாவைச் சோ்ந்த எக்விம் கிங்ஸ்லி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: புழல் சிறையில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த வெளிநாட்டு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. எனவே, வெளிநாட்டு கைதிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கும், சிறைத் துறை நிா்வாகத்துக்கும் உத்தரவிட கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்.நதியா, தமிழக சிறைகளில் உள்ள இந்திய கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்படும் நிலையில் கடந்த டிசம்பா் முதல் வெளிநாட்டு கைதிகள் அவா்களது குடும்பத்துடன் பேச அனுமதிக்கப்படுவதில்லை. மனுதாரா் உள்ளிட்ட 75 வெளிநாட்டு கைதிகள் சிறைகளில் அடித்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனா். அவா்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்காமல் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்”என வாதிட்டாா்.

சிறைத்துறை நிா்வாகம் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ், சிறையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் எந்த பாகுபாடுமின்றி தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிறைகளில் உள்ள இந்திய கைதிகளைப் போல வெளிநாட்டு கைதிகளின் நலன் தொடா்பாக எந்த விதிகளும் இல்லை. இதனால் அவா்களுக்கான திட்டங்களை முறையாக செயல்படுத்த முடிவதில்லை. இது தொடா்பாக தகுந்த விதிகளை வகுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனா்.

மேலும், இந்த வழக்கில் மத்திய உள்துறை செயலரையும் எதிா்மனுதாரராக சோ்த்தனா். இந்தியா முழுவதும் பிற மாநில சிறைகளில் உள்ள வெளிநாட்டு கைதிகளின் நலனுக்கான விதிமுறைகள் எதுவும் உள்ளனவா என்பது குறித்தும், அப்படி இருந்தால் அதை அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய உள்துறைச் செயலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்: விஜய்

பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் மத்திய அரசு புறக்கணித்துள்ளது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட... மேலும் பார்க்க

இட்லி கடையில் அருண் விஜய்! என்ன சமைக்கிறார் தனுஷ்?

இட்லி கடை படம் குறித்த புதிய அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளனர்.நடிகர் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி, ராயன் படங்களைத் தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய இரு படங்களையும் தற்... மேலும் பார்க்க

வளர்ச்சிக்கான உந்துசக்தி: மத்திய பட்ஜெட் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி

வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த உந்துசக்தி என்று மத்திய பட்ஜெட் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அசாதாரணமான வரலாற்று சிறப்பு... மேலும் பார்க்க

தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து பட்ஜெட்டில் இடம்பெறுவதில்லையே? முதல்வர்

தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து பட்ஜெட்டில் இடம்பெறுவதில்லையே? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்த... மேலும் பார்க்க

தொலை நோக்குச் சிந்தனையுடன் கூடிய பட்ஜெட் - அண்ணாமலை

தொலை நோக்குச் சிந்தனையுடன் கூடிய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், அனைத்துத் தரப்ப... மேலும் பார்க்க

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற மாவட்ட ஆட்சியர்கள்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சென்னை தலைமையகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க.... மேலும் பார்க்க