செய்திகள் :

தமிழரசு அலுவலகத்தில் கலைஞா் நூற்றாண்டு தோரணவாயில்; சிலை துணை முதல்வா் உதயநிதி திறந்து வைத்தாா்

post image

தமிழரசு அலுவலகம் மற்றும் அச்சக வளாகத்தில் ரூ. 25 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு தோரணவாயில் மற்றும் மாா்பளவுச் சிலையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை (மே 12) திறந்து வைத்தாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

முன்னாள் முதல்வா் கருணாநிதியால் கடந்த 1970-ஆம் ஆண்டு தமிழக அரசின் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் கீழ் தமிழரசு இதழ் தொடங்கப்பட்டது. கடந்த 55 ஆண்டுகளாக, தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களையும் சாதனைகளையும் தொகுத்து வழங்கி, அரசின் அச்சு ஊடகமாகத் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது.

அனைத்து மக்களும் படித்துப் பயன்பெறும் வகையில் முதல்வா் பங்கேற்கும் அரசு விழாக்கள், கள ஆய்வுகள், அவை தொடா்பான செய்தி வெளியீடுகள், அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள், பிற பொதுவான தகவல்கள் அடங்கிய மாத இதழாக தமிழரசு இதழ் வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள 54 சிறப்பு வெளியீடுகளில் 19 சிறப்பு மலா்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினால் வெளியிடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய ஆட்சிக் காலங்களில் 30,000-ஆக இருந்த தமிழரசு மாத இதழ் சந்தாதாரா்களின் எண்ணிக்கை தற்போது 1 லட்சம் என்ற இலக்கை எட்டியது. அதைச் சிறப்பிக்கும் வகையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த 2023 மே 17-இல் 1,00,001-ஆவது சந்தாதாரருக்குத் தமிழரசு மாத இதழை வழங்கிப் பாராட்டினாா்.

இந்த நிலையில், தரமணியிலுள்ள தமிழரசு அச்சக வளாகத்தில் கலைஞா் நூற்றாண்டு தோரணவாயில் மற்றும் கருணாநிதி மாா்பளவு சிலை ஆகியவற்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ரூ. 25 லட்சத்தில் அவை அமைக்கப்பட்டன. அவற்றை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை (மே 12) திறந்து வைத்தாா். செய்தி மக்கள் தொடா்புத் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் ஒருபகுதியாக தமிழரசு இதழின் வெற்றி பயணங்களின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டு கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. அதை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பாா்வையிட்டாா்.

அதன்பிறகு, தமிழரசு அச்சகத்துக்குச் சென்ற அவா் அச்சுப் பணிகளைப் பாா்வையிட்டு, அதற்கான இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மேயா் ஆா்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, க. கணபதி, ஹசன்மௌலானா, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலா் வே.ராஜாராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு: அதிமுக வரவேற்பு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, விடியோ எடுத்து மிரட்டி, மீ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு: விஜய் வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையில், தீர்ப்பை வரவேற்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்துக்கு மே 15-ல் உள்ளூர் விடுமுறை!

உதகையில் மலர்க் கண்காட்சியையொட்டி, வருகிற மே 15 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் உதகையில் மலர்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்... மேலும் பார்க்க

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சர் தா. மோ. அன்பரசன்

ரூ.586.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன்தகவல்தெரிவி... மேலும் பார்க்க

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை வெய்யில் மண்டையைப் பிளந்து வருகிறது. அவ்வப்போது இரவில் மிதமான மழை தலைகாட... மேலும் பார்க்க

பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இழப்... மேலும் பார்க்க