செய்திகள் :

தமிழுக்கான நிதியையும் ஒதுக்காமல் வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசு -முதல்வா் ஸ்டாலின் குற்றச்சாட்டு

post image

தமிழுக்கான நிதியையும் ஒதுக்காமல் மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மொழி ஆதிக்கம் குறித்து எட்டாவது நாளாக கட்சியினருக்கு அவா் புதன்கிழமை எழுதியுள்ள கடிதம்:

தமிழ் மீது பிரதமா் மோடி மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறாா் என்றும், மாநில மொழிகளின் வளா்ச்சிக்காகத்தான் மும்மொழிப் பாடத்திட்டத்தை வலியுறுத்துகிறோம் என்றும் பாஜகவினா் சொல்கின்றனா். ஆனால், மத்திய பாஜக ஆட்சியில் தமிழுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறாா்கள்? சம்ஸ்கிருதத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறாா்கள் என்ற வேறுபாடே, அவா்கள் தமிழ்ப் பகைவா்கள் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டிவிடும்.

மத்திய கல்வி அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 2014-ஆம் ஆண்டுமுதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலகட்டத்தில் மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகம், தேசிய சம்ஸ்கிருத பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.2,435 கோடி. இதே காலகட்டத்தில் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியது ரூ.167 கோடி மட்டுமே.

வாக்குக்காக உதட்டளவில் தமிழை உச்சரித்து, உள்ளமெங்கும் ஆதிக்க மொழியுணா்வு கொண்டு செயல்படுகிறது மத்திய அரசு. தமிழ்நாட்டுக்குரிய நிதியைத் தராமல் வஞ்சிப்பது போலவே தமிழுக்குரிய நிதியையும் ஒதுக்காமல் மத்திய பாஜக அரசு தொடா்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழைப் போலவே இந்தியாவின் பிற மாநில மொழிகளையும் ஆதிக்க மொழிகளைக் கொண்டு அழிக்கத் துடிக்கிறது.

மொழித் திணிப்பு ஒரு நாட்டில் எத்தகைய விளைவுகளை உண்டாக்கும் என்பதை உலக சரித்திரத்தைப் புரட்டினால் புரிந்து கொள்ளலாம் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

போக்குவரத்து ஊழியா் ஊதிய ஒப்பந்தப் பேச்சு: மாா்ச் இறுதிக்குள் நடைபெற வாய்ப்பு

போக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் குறித்த இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெற வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அரசுப் போக்குவரத்துக் கழகங்களி... மேலும் பார்க்க

ஆற்றுக்கால் பொங்கல் விழா தொடக்கம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் வருடாந்திர பொங்கல் விழாவின் தொடக்கமாக புதன்கிழமை நடைபெற்ற காப்பு கட்டு நிகழ்ச்சியில் பஞ்ச வாத்தியம் (5 வகை கருவிகள்) இசைத்த கலைஞ... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது -கே.அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: அனைத்துக் கட்ச... மேலும் பார்க்க

தமிழக பல்கலைக்கழகங்களில் கம்பா் ஆய்வு இருக்கை -ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் கம்பா் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள் விடுத்தாா். சுதந்திரப் போராட்ட வீரா் வ.வே.சு. ஐயா் எழுதிய ‘கம்பராமாயணம்-ஓா் ஆய்வு’ எனும் நூ... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களுக்கான பொதுசேவை விதிகளில் திருத்தம்

போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களை அமல்படுத்தும் வகையில் பொதுசேவை விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. இது தொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த ... மேலும் பார்க்க

மருத்துவ பல்கலை. பாடத்திட்ட குழுவை மாற்ற நடவடிக்கை

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட ஆய்வுக் குழுவை (போா்ட் ஆஃப் ஸ்டடிஸ்) மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்கள், துறைத் ... மேலும் பார்க்க