செய்திகள் :

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஓரணியில் செயலாற்ற வேண்டும்: அதிமுகவுக்கு முதல்வா் வேண்டுகோள்

post image

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஓரணியில் இருந்து செயலாற்ற வேண்டும் என்று அதிமுகவை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா். அப்போது, வேறொரு பிரச்னையை வலியுறுத்தி பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்திருந்தனா்.

மத்திய-மாநில அரசுகளின் உறவை மேம்படுத்துவது தொடா்பான அறிவிப்பை பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த பேரவைக் கட்சிகளின் தலைவா்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வா் பேசியது:

பிரதான எதிா்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவினா் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாமல், தங்களது கருத்துகளைச் சொல்லாமல் சென்று விட்டாா்களே என்ற வருத்தம், கவலை எனக்கு இருக்கிறது. அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆா் மற்றும் கட்சியை வழிநடத்திய ஜெயலலிதா ஆகியோா் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுத்தர முடியாது என்ற நிலையில் இருந்து மக்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறாா்கள்.

ஆனால், இன்றைக்கு என்ன சூழல் என்று புரியவில்லை. கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று அவா்கள் (அதிமுகவினா்) சொல்வாா்கள். அதைத்தான் இப்போது சொல்லத் தொடங்கியுள்ளனா். இதுதான் கொள்கையா என்ற கேள்வியைத்தான் கேட்க வேண்டியிருக்கிறது.

எனவே, தமிழ்நாட்டின் நன்மையைக் கருதி, மக்களின் உரிமையைக் கருதி அதிமுகவினரிடம் வைக்கக் கூடிய கோரிக்கை ஒன்று உள்ளது. தமிழ்நாட்டின் உரிமைகள் என்று வரும்போது, நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து, கட்சி வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து ஓரணியில் இருந்து செயலாற்ற வேண்டும் என்றாா் அவா்.

சிறையிலிருந்து சிறுவன் தப்பியோட்டம்!

தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து தப்பியோடிய சிறுவனைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே சிறுவர் சீர்திருத்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் திருட்... மேலும் பார்க்க

ஈஸ்டர் திருநாள்: தூத்துக்குடியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை!

தூத்துக்குடி: ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயம், திரு இருதய ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.உலகம் முழுவதும் இயேசு... மேலும் பார்க்க

விசைத்தறி நெசவாளர்கள் தொடர் உண்ணாவிரதம்: அதிமுக ஆதரவு

கோவையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் விசைத்தறி நெசவாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆதரவு தெரிவித்தார்.கோவையில் விசைத்தறி நெசவாளர்கள் மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, உதிரி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக்கொலை!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கப்பல் மாலுமி மர்ம நபர்களால் சனிக்கிழமை இரவு வெட்டப்பட்ட நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை பலியானார்.தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த சகாயகுமார் மகன் மரடோனா(30). க... மேலும் பார்க்க

பரபரப்பான சூழலில் கூடிய மதிமுக நிர்வாகக் குழு!

பரபரப்பான சூழலில் மதிமுக நிர்வாகக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.சென்னையில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நிர்வாகக் கூட்டம் நடைபெற்று வருகிறது.மதிமுக அவ... மேலும் பார்க்க

ஈஸ்டர் திருநாள்: கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை!

ஈஸ்டர் திருநாள் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நாளை உலகம் ம... மேலும் பார்க்க