செய்திகள் :

தமிழ்நாட்டின் மகுடத்தில் மீண்டும் ஒரு வைரக்கல்! - 'கிராண்ட் மாஸ்டர்' பட்டத்தை வென்ற இளம்பரிதி!

post image

நேற்று சென்னையை சேர்ந்த இளம்பரிதி ஏ.ஆர் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த பிஜெல்ஜினா ஓபனில் 'கிராண்ட் மாஸ்டர்' பட்டம் பெற்றுள்ளார்.

இந்தியாவில் இருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுபவர்களில் இவர் 90-வது நபர் ஆவார்.

2009-ம் ஆண்டு பிறந்த இவர், இதற்கு முன்பு, 2023-ம் ஆண்டு வியாட்நாமில் நடந்த ஹா நொய் போட்டியிலும், 2024-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த சிங்கப்பூர் சர்வதேச ஓபனிலும் ஜி.எம் நார்ம் பெற்றிருந்தார்.

நேற்று மீண்டும் ஜி.எம் நார்ம் பெற்றதோடு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

இளம்பரிதி ஏ.ஆர்
இளம்பரிதி ஏ.ஆர்

பொதுவாக, மூன்று ஜி.எம் நார்ம் பெறுபவர்களுக்கே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது வெற்றியை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

ஸ்டாலின் தமிழ்நாட்டின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதி என்றும், தமிழ்நாட்டின் மகுடத்திற்கு மேலும் ஒரு வைரத்தைச் சேர்த்துள்ளார் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்துகள் இளம்பரிதி!

உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரமகளுக்கு அங்கீகாரம்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஐசிசி உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்திருக்கும் இந்தச் சூழலில், அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு மாநில அரசுகள் அளித்த கௌரவம் உணர்வுப்பூர்வமானது. ஆந்திரப் ... மேலும் பார்க்க

`எனது தாத்தா சொன்னார்' - இந்திய அணிக்கு விளையாட குடியுரிமையை சரண்டர் செய்த ஆஸி., கால்பந்து வீரர்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் அடிப்படையில் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர். அவரின் பெற்றோர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் ஆவார். வில்லியம்ஸ் குடும்பத்தினர் அவரது ... மேலும் பார்க்க

Ind v Aus: "இந்தியாவிடம் அடைந்த தோல்வி இன்னும் வலிக்கிறது"- ஆஸ்திரேலிய கேப்டன் அலிஷா ஹீலி

கடந்த ஞாயிற்று கிழமை (நவ. 2) நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்... மேலும் பார்க்க

`RCB அணி விற்பனைக்கு.!’ - விரும்பும் பூனாவாலா; களத்தில் குதிக்கும் அதானி - அணியின் மதிப்பு தெரியுமா?

ஆர்.சி.பி எனப்படும் ராயல் சேலஞ்சர் பெங்களூரு ஐ.பி.எல் கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரது நிறுவனம் பிரிட்டனை சேர்ந்த டி... மேலும் பார்க்க

'இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய அந்த 45 நிமிட பயிற்சி!' - ரகசியம் என்ன தெரியுமா?

தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. இந்திய பெண்கள் அணி வெல்லும் முதல் உலகக்கோப்பை என்பதால் இது ஒரு வரலாற்று வெற்றியாக பார்க்கப்பட... மேலும் பார்க்க