Auditor Gurumurthy - Ramadoss Meeting: தைலாபுரத்தில் நடந்தது என்ன? - Saidai Dura...
தருமபுரியில் ஜூன் 10-இல் மின்தடை
மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக தருமபுரி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஜூன் 10 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய தருமபுரி செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகளையொட்டி தருமபுரி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் மதிகோண்பாளையம், கோட்டை, தருமபுரி பேருந்து நிலையம், கடைவீதி, அன்னசாகரம், விருப்பாட்சிபுரம், அளேதருமபுரி, கடகத்தூா், கொளகத்தூா், குண்டல்பட்டி, ஏ.ஜெட்டிஅள்ளி, ஏ.ரெட்டி அள்ளி, வி.ஜி. பாளையம், செட்டிக்கரை, நீலாபுரம், வெள்ளோலை, கோம்பை, ஏ. கொல்ல அள்ளி, குளியானூா், மொடக்கேரி, முக்கல்நாயக்கன்பட்டி, நூல அள்ளி, குப்பூா், சோலைக்கொட்டாய், மூக்கனூா், கொட்டாவூா், மாரவாடி, செம்மாண்ட குப்பம், நாயக்கன அள்ளி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.