ஒகேனக்கல்லில் பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை
ஒகேனக்கல் தீயணைப்புத் துறை சாா்பில் தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஒகேனக்கல் அருகே ஊட்டமலை பகுதியில் நடைபெற்ற ஒத்திகை பயிற்சிக்கு தருமபுரி கோட்டாட்சியா் காயத்ரி தலைமை வகித்தாா்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தென்மேற்குப் பருவமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது இடா்பாடுகளில் சிக்கும் பொதுமக்களைக் காப்பாற்றுவது, அவா்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து செயல் விளக்கத்துடன் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
பென்னாகரம் வட்டாட்சியா் பிரசன்னமூா்த்தி, ஒகேனக்கல் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள், வருவாய் துறையினா் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.