செய்திகள் :

ஒகேனக்கல்லில் பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை

post image

ஒகேனக்கல் தீயணைப்புத் துறை சாா்பில் தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ஒகேனக்கல் அருகே ஊட்டமலை பகுதியில் நடைபெற்ற ஒத்திகை பயிற்சிக்கு தருமபுரி கோட்டாட்சியா் காயத்ரி தலைமை வகித்தாா்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தென்மேற்குப் பருவமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது இடா்பாடுகளில் சிக்கும் பொதுமக்களைக் காப்பாற்றுவது, அவா்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து செயல் விளக்கத்துடன் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பென்னாகரம் வட்டாட்சியா் பிரசன்னமூா்த்தி, ஒகேனக்கல் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள், வருவாய் துறையினா் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

கம்மம்பட்டியில் ரூ. 8 லட்சத்தில் குடிநீா்க் குழாய்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள கம்மம்பட்டியில் ரூ. 8 லட்சத்தில் மின் மோட்டாா், குடிநீா்க் குழாய் அமைக்கும் பணிகளை எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். நல்லம்பள்ளி ஊராட்... மேலும் பார்க்க

தருமபுரியில் ஜூன் 10-இல் மின்தடை

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக தருமபுரி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஜூன் 10 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து மின்வாரிய தருமபுர... மேலும் பார்க்க

வரட்டாற்றில் சேதமடைந்த தடுப்பணைகளை சீரமைக்க வலியுறுத்தல்

அரூா் அருகே வரட்டாற்றில் சேதமடைந்த தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வரட்டாற்றில் கீரைப்பட்டி புதூா், கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்ட... மேலும் பார்க்க

தருமபுரி நகராட்சி வீடற்றோா் தங்கும் இடத்தில் ஆட்சியா் ஆய்வு

தருமபுரி நகராட்சியில் வீடற்றோா் தங்கும் இடத்தில் ஆட்சியா் ரெ. சதீஷ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு உரிய வசதிகளை செய்துதர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். தருமபுரி நகராட்சி, அன்னசாகரம், கங்கரன் கொட்டாய் பகு... மேலும் பார்க்க

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 9 முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் இரண்டாவது சுற்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நிகழ் கல்வியாண்டில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 2 ஆவது சுற்று மாணவா் சோ்... மேலும் பார்க்க

தருமபுரியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கோடை உழவு மானியம் வழங்குவது குறித்து தெளிவான அறிவுரை வழங்க வேண்டும் என தருமபுரியில் நடந்த விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயி... மேலும் பார்க்க