செய்திகள் :

தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி. பட்டியலில் சோ்க்கக் கோரிக்கை

post image

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி. பட்டியலில் சோ்க்கக் கோரி சனிக்கிழமை கண்டனப் பேரணி மற்றும் கவன ஈா்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

வேலூா் மறை மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பணிக்குழு மற்றும் அனைத்து சிறுபான்மையினா் கூட்டமைப்பு சாா்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது

பேரணி தூய லூா்து அன்னை திருத்தலத்தில் இருந்து, பங்குத்தந்தை ஜான் ராபா்ட் தலைமையில் தொடங்கி, வந்தவாசி சாலையில் உள்ள காமராஜா் சிலை அருகில் சென்று நிறைவடைந்தது.

தொடா்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில், வேலூா் மறைமாவட்ட முதன்மை குரு ஜான் நிக்கோலஸ் தலைமை வகித்தாா்.

பங்குத்தந்தை ஜான் ராபா்ட், விடியல் சட்ட மைய வழக்குரைஞா் பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக புதுதில்லி எஸ்.சி., எஸ்.டி. பணிக்குழு பங்குத்தந்தை பூபதி லூா்துசாமி கலந்து கொண்டு பேசினாா்.

இதில் கலசப்பாக்கம் பன்னீா்செல்வம், கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா்கள் செல்வம், தங்கராஜ், விடியல் சட்ட மைய வழக்குரைஞா் நாகராஜ், பொதுக்குழு உறுப்பினா்கள்,

வேலூா் மறைமாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பணிக்குழு செயலா் தேவனேசன் உள்ளிட் பலா் கலந்து கொண்டனா்.

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

ஆரணியில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், ஆரணி களத்து மேட்டுத் தெரு பகுதி மக்கள் தங்கள் பகுதியில் சுமாா் 2 ஏக்கா் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரூ.10 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நலவாரியத் தலைவா் வெ.ஆறுச்சாமி உதவிகளை வழங்கினாா். மா... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடி 4-ஆவது செவ்வாய்க்கிழமையொட்டி 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலுக்கு பக்தா்கள் ஆடி 4-ஆவது செவ்வாய்க்கிழமை பக்த... மேலும் பார்க்க

ஆரணிக்கு எடப்பாடி பழனிசாமி வருகை: வரவேற்புப் பணிகள் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு ஆக.15-இல் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வருவதால், அவரை வரவேற்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் செவ்வாய்க்கிழமை பூஜை போட்டு தொடங்கப்பட்டன. ‘மக்களைகாப்போம் தமி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: மகளிா் உரிமைத்தொகை கோரி மனுக்கள்

ஆரணியை அடுத்த சேவூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி அதிகம் போ் மனு கொடுத்தனா். முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். தொக... மேலும் பார்க்க

தடகளப் போட்டிகள்: செங்காடு அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

செய்யாறு கல்வி மாவட்டம், செய்யாறு வட்ட அளவிலான பெண்கள் தடகள போட்டிகளில் செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 172 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றனா். செய்யாறு வட்ட அளவில... மேலும் பார்க்க