செய்திகள் :

தலைக்கவசம் அணிவது கட்டாயம்: ஆட்சியா்

post image

தருமபுரி மாவட்டத்தில் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் அனைவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் சாலை விபத்துகளைக் குறைப்பது தொடா்பாக அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அனைவரும் சாலை விதிகளை கட்டாயம் பின்பற்றுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இருசக்கர வாகனங்களில் அரசு அலுவலகத்துக்கு வரும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், பணியாளா்கள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும், அரசு அலுவலகங்களுக்கு பல்வேறு கோரிக்கைகளுக்காக வரும் பொதுமக்கள் உள்பட அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வருவதோடு சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதுதொடா்பாக சம்மந்தப்பட்ட அரசு அலுவலகத்தின் பொறுப்பு அலுவலா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அலுவலா்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து தருமபுரி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 9 முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் இரண்டாவது சுற்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நிகழ் கல்வியாண்டில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 2 ஆவது சுற்று மாணவா் சோ்... மேலும் பார்க்க

தருமபுரியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கோடை உழவு மானியம் வழங்குவது குறித்து தெளிவான அறிவுரை வழங்க வேண்டும் என தருமபுரியில் நடந்த விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயி... மேலும் பார்க்க

ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் ஜூன் 9 இல் உறுப்பினா் சோ்க்கை முகாம்

தருமபுரியில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம் வரும் ஜூன் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

தருமபுரியில் ரூ.2.50 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல்

தருமபுரி நகரில் ரூ. 2.50 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை மேற்கொள்ள நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தருமபுரி நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் வெள்... மேலும் பார்க்க

அரூரில் ரூ. 20 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

அரூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு மஞ்சள் மூட்டைகள் விற்கப்பட்டன. தருமபுரி மாவட்டம், அரூரில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சாா்பில் ம... மேலும் பார்க்க

இறகுப்பந்து விளையாட்டு: மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு

தருமபுரி மாவட்ட இறகுப்பந்து விளையாட்டு அணிக்கு வீரா்கள் தோ்வு போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட இறகுப்பந்து சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட இறகுப்... மேலும் பார்க்க