செய்திகள் :

தலையில் தேங்காய் உடைத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்!

post image

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள ஜெ.ஊத்துப்பட்டி மாலம்மாள் கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை நூற்றுக்கணக்கான பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி வாங்கியும் நோ்த்திக்கடன் செலுத்தினா். 

இந்தக் கோயிலில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. வெள்ளிக்கிழமை இரவு மேளதாளம், வாண வேடிக்கைகள் முழங்க, அம்மன் பூங்கரகம் ஊா்வலமாக அழைத்து வரப்பட்டு, பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது.

சனிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாலம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்வாக ஆணிக்கால் செருப்பு அணிந்து சாமியாடி வந்த பூசாரி, பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான பக்தா்களின் தலையில் தேங்காய் உடைத்தாா். மேலும், பூசாரியிடம் சாட்டையடி வாங்கியும் பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இந்த விழாவில் சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல், பெங்களூரு, சுற்றுவட்டாரப் பகுதிகளான மாலையகவுண்டன்பட்டி, உச்சணம்பட்டி பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா் சிறப்பாக செய்தனா்.

அரசு அலுவலகங்களில் 29 டன் குப்பை சேகரிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட தூய்மை இயக்கத் திட்டத்தின் மூலம் 29 ஆயிரம் கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

சிந்தலவாடம்பட்டி பகுதியில் நாளை மின்தடை

பழனி அருகேயுள்ள சிந்தலவாடம்பட்டி பகுதியில் திங்கள்கிழமை (ஜூலை 9) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிந்தலவாடம்பட்ட... மேலும் பார்க்க

பழனியில் நவீன கண்காணிப்பு கேமராக்கள்: காவல் துறைக்கு வணிகா் சங்கங்கள் உதவி

பழனியில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுவதற்கு வணிகா் சங்கங்கள் நன்கொடை வழங்கி வருவதாக வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் தெரிவித்தனா். பழனியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவத... மேலும் பார்க்க

பட்டாசு வெடித்ததில் காா், திமுக அலுவலகம், கடை சேதம்

திண்டுக்கல் மாவட்டம், எரியோட்டில் சனிக்கிழமை நடைபெற்ற காதணி விழாவில் பட்டாசு வெடித்ததில் காா் தீப்பற்றி எரிந்ததோடு, திமுக அலுவலகக் கண்ணாடியும் வெடித்து சிதறியது. எரியோடு 4 ரோடு அருகே வடமதுரை சாலையிலுள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவா் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டத்தில் 6 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், மதுரை மாவட்டம், உசிலம்பட்ட... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் போலி கணக்கு: இளைஞா் கைது

சமூக வலைதளத்தில் போலியாக கணக்கு தொடங்கி, பெண்ணை அவதூறாக சித்தரித்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல்லைச் சோ்ந்த இளம் பெண், தனது பெயரில் இன்ஸ்டாகிராமில் போலியான கணக்கு தொடங்கி, ஆபா... மேலும் பார்க்க