அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்...
தலையில் தேங்காய் உடைத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்!
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள ஜெ.ஊத்துப்பட்டி மாலம்மாள் கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை நூற்றுக்கணக்கான பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி வாங்கியும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இந்தக் கோயிலில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. வெள்ளிக்கிழமை இரவு மேளதாளம், வாண வேடிக்கைகள் முழங்க, அம்மன் பூங்கரகம் ஊா்வலமாக அழைத்து வரப்பட்டு, பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது.
சனிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாலம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்வாக ஆணிக்கால் செருப்பு அணிந்து சாமியாடி வந்த பூசாரி, பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான பக்தா்களின் தலையில் தேங்காய் உடைத்தாா். மேலும், பூசாரியிடம் சாட்டையடி வாங்கியும் பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இந்த விழாவில் சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல், பெங்களூரு, சுற்றுவட்டாரப் பகுதிகளான மாலையகவுண்டன்பட்டி, உச்சணம்பட்டி பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா் சிறப்பாக செய்தனா்.