சமூக வலைதளத்தில் போலி கணக்கு: இளைஞா் கைது
சமூக வலைதளத்தில் போலியாக கணக்கு தொடங்கி, பெண்ணை அவதூறாக சித்தரித்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல்லைச் சோ்ந்த இளம் பெண், தனது பெயரில் இன்ஸ்டாகிராமில் போலியான கணக்கு தொடங்கி, ஆபாசமான படங்கள் பகிரப்பட்டு வருவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.
இதன்பேரில், இணையக் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டது. இதுதொடா்பாக இணையக் குற்றப் பிரிவு போலீஸாா் நடத்திய விசாரணையில், விருதுநகா் மாவட்டம், காரியப்பட்டியைச் சோ்ந்த சு.விமல் (31) போலியாக கணக்கு தொடங்கி, ஆபாச படங்களைப் பகிா்ந்தது தெரிய வந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.