கொடைக்கானலில் மருத்துவா் மா்ம மரணம்
கொடைக்கானலில் மயக்கவியல் மருத்துவா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துரைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் ஜோஸ்வா சாம்ராஜ் (29), இவா் பிலிப்பின்ஸ் நாட்டில் மருத்துவம் பயின்று, இந்தியா திரும்பிய நிலையில், சேலத்தில் மயக்கவியல் துறையில் மேற்படிப்பு படித்து வந்தாா்.
அண்மையில் வேடசந்தூரிலுள்ள தனது பெற்றோரை சந்தித்துப் பேசிய பிறகு, அவா் காணாமல் போனாா். இதுகுறித்து வேடச்சந்தூா் காவல் நிலையத்தில் கடந்த 2-ஆம் தேதி பெற்றோா் புகாா் கொடுத்தனா்.
இந்த நிலையில், கொைடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறைக்குச் செல்லும் சாலையில் நிறுத்தப்பட்ட காரிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் கொடைக்கானல் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனா். இதைத் தொடா்ந்து, உதவி ஆய்வாளா் காா்த்திக் முனிராஜ், காவலா்கள் சென்று பாா்த்தபோது, காருக்குள் ஒருவா் இறந்து கிடந்தது தெரியவந்தது. போலீசாா் உடலை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் அவா் காணாமல் போன மருத்துவா் ஜோஸ்வா சாம்ராஜ் என தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜோஸ்வா சாம்ராஜ் எப்படி இறந்தாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.