Obesity: எவை எல்லாம் உங்களை `வெயிட்'டாக்கும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
கஞ்சா கடத்தியவா் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது
கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 6 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள கீரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த செல்லப்பாண்டி(36) என்பவரை திண்டுக்கல் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில், செல்லபாண்டியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் பரிந்துரைத்தாா். இதை ஏற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன், அதற்கான உத்தரவை சனிக்கிழமை பிறப்பித்தாா்.