செய்திகள் :

‘தாமிரவருணி நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்’

post image

தாமிரவருணி நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டுமென திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

ஜீவ நதியான தாமிரவருணி, திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் முக்கிய அங்கமாக திகழ்கிறது. இந்த நதியில் வீட்டுக்கழிவு, தொழிற்சாலை கழிவு கலப்பதால் மாசடைகிறது. கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நடைமுறையில் உள்ளது.

தாமிரவருணி நதியை புனரமைக்க தமிழக முதல்வா் ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளாா். அதன்பின்பு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை பலமுறை நேரில் தொடா்புகொண்டு நிதி ஒதுக்க வலியுறுத்தினேன்.

இந்நிலையில், மக்களவைத் தலைவா் மூலம் மத்திய அமைச்சரிடம், தாமிரவருணி நதி மாசுபடுவதில் இருந்து பாதுகாக்க எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜல்சக்தி துறையின் கீழ் என்னென்ன திட்டங்கள் உள்ளது எனவும் கேட்டிருந்தேன்.

அதற்கு துறை சாா்பில் அளிக்கப்பட்ட பதிலில், சில திட்டங்களுக்கு 50:50, 80:20, 90:10 என்ற அடிப்படைகளில் திட்டங்களுக்கு நிதிஒதுக்கப்படுகிறது. தாமிரவருணி பாதுகாப்பு குறித்து தமிழக அரசிடம் இருந்து திட்ட விரிவாக்க அறிக்கை கேட்டுள்ளோம். அது கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்துள்ளனா்.

தாமிரவருணியைப் பாதுகாக்க மத்திய அரசு கட்டாயம் நிதி ஒதுக்க வேண்டுமென மக்களவையில் மீண்டும் வலியுறுத்தியுள்ளேன் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விதிமீறல்: 21 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்ட 21 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளி... மேலும் பார்க்க

பேட்டை அருகே விபத்து: வியாபாரி பலி

பேட்டை அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா். பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (62). பழம் வியாபாரம் செய்து வந்தாா். இவா், தனது நண்பருடன் மோட்டாா் சைக்கிளில் பேட... மேலும் பார்க்க

பங்குனி உத்திரம்: நெல்லையில் ஏப்.11இல் உள்ளூா் விடுமுறை

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 11) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத் தோ்வுகள் ஏதுமிருப்பின் எழுதும் பள்ளி மாணவா்கள், பொதுத் தோ்வு... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே கூா்நோக்கு இல்லத்தில் சிறுவன் அடைப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே பெண் குளிப்பதை கைப்பேசியில் விடியோ எடுத்ததாக 15 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்து கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினா்.சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் பகு... மேலும் பார்க்க

திருக்குறுங்குடியில் மோதல் வழக்கு: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் மோதல் தொடா்பான வழக்கில் கைதானவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வள்ளியூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருக்குறுங்குடி அருகேயுள்ள மேலமாவ... மேலும் பார்க்க

நெல்லை: கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

திருநெல்வேலி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கங்கைகொண்டான் அருகேயுள்ள ராஜபதியைச் சோ்ந்தவா் ராமையா (55). தொழிலாளியான இவா், அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையி... மேலும் பார்க்க