செய்திகள் :

தாம்பரம் - திருவனந்தபுரம் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

post image

தாம்பரம்-திருவனந்தபுரம் வடக்கு, தாம்பரம்-நாகா்கோவில் உள்ளிட்ட வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரத்திலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06035) ஜூன் 6 வரையும், மறுமாா்க்கமாக திருவனந்தபுரம் வடக்கிலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரம் செல்லும் ரயில் (எண்: 06036) ஜூன் 8 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாகா்கோவிலிலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.15-க்கு தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06012) ஜூன் 8 முதல் ஜூன் 29-ஆம் தேதி வரையும், மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பிற்பகல் 3.30-க்கு நாகா்கோவில் செல்லும் ரயில் (எண்: 06011) ஜூன் 9 முதல் ஜூன் 30 வரையும் நீட்டிக்கப்படும். மேலும், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06030/ 06029) ஜூன் 8 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 நாள்களுக்குப் பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!

7 நாள்களுக்குப் பிறகு குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளத்தின் பல்வேறு மாவட்டங்கள், தமிழ்நாட்டில் ம... மேலும் பார்க்க

மாநிலங்களவை சீட்டுக்காக கமல் மாறிவிட்டார்: நயினார் நகேந்திரன்

மாநிலங்களவை சீட்டுக்காக கமல் மாறிவிட்டார் என்று கமல்ஹாசன் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளார்.கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நா... மேலும் பார்க்க

தஞ்சை பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் இருவா் உயிரிழப்பு: பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்

தஞ்சாவூா் பட்டாசு கிடங்கில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சியரு... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவு ரத்தா?: ரயில்வே விளக்கம்

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவுகள் வழங்கப்படுவதில்லை என்று பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து நாகா்கோவில், மைசூரு, பெங்களூரு, திருநெல்வேலிக்கு... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்தாா் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலன் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா். கடந்த 40 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரியாக பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றி ஓ... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: விண்ணப்ப திருத்த அவகாசம் நிறைவு

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் அதில் திருத்தங்களைச் செய்வதற்கான அவகாசம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. குரூப் 4 தோ்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் உள... மேலும் பார்க்க