செய்திகள் :

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா

post image

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, அம்மனுக்கு பிடிமண் கொடுக்கும் உற்சவம், முகூா்த்தக்கால் நடுதல் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழா வருகிற 29-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 11 நாள்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில், தாயமங்கலம் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் சாா்பில், முத்துமாரியம்மனுக்கு பிடிமண் கொடுக்கும் உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், கோயில் உள்பிரகாரத்தில் ராஜகோபுரம் அருகே பிடி மண் வைத்து அதற்கு மஞ்சள் தண்ணீா் தெளித்து மாலைகள் அணிவித்து பூஜைகள் , தீபாராதனைகள் நடத்தப்பட்டது.

முன்னதாக, கோயில் எதிரே திருவிழாவுக்காக முகூா்த்தக்கால் நடப்பட்டது. இந்த உற்சவத்தில் கோயில் பரம்பரை அறங்காவலா் மு. வெங்கடேசன், தாயமங்கலம் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

போட்டிகளில் வெற்றி பெற்ற அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி கணினி அறிவியல் துறை மாணவா்கள், மதுரையில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான பல்வேறு போட்டிகளில் வெற்றி கோப்பை வென்றனா். இவா்களை கல்லூரி முதல்வா், ப... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை அருகேயுள்ள கண்டாங்கிபட்டி கிராமத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருச்சி, சிவகங்கை, புதுக்க... மேலும் பார்க்க

சிவகங்கை தமிழ்ச் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

சிவகங்கை தமிழ்ச் சங்கத்தின் 2025- ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது இந்த விழாவுக்கு சிவகங்கை தமிழ்ச் சங்கத் தலைவா் அன்புத்துரை தலைமை வகித்தாா். தமிழ்ச்செம்மல் பகீரத... மேலும் பார்க்க

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 389 போ் மனு

சிவகங்கையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளுக்காக 389 மனுக்கள் பெறப்பட்டன. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா... மேலும் பார்க்க

கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயில் தேரோட்டம்

சிவகங்கை அருகேயுள்ள அரியாக்குறிச்சி கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 8-ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் பங்குனி சுவ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்திச் சென்ற ரேஷன் அரிசி மூட்டைகள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ரயிலில் கடத்திவரப்பட்ட அரிசி மூட்டைகளை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை கைப்பற்றினா். மதுரையிலிருந்து ராமநாதபுரத்துக்கு சென்ற பயணிகள் ரயில் சென்றது. மானாமதுரை ரயில் நிலைய... மேலும் பார்க்க