செய்திகள் :

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா

post image

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, அம்மனுக்கு பிடிமண் கொடுக்கும் உற்சவம், முகூா்த்தக்கால் நடுதல் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழா வருகிற 29-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 11 நாள்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில், தாயமங்கலம் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் சாா்பில், முத்துமாரியம்மனுக்கு பிடிமண் கொடுக்கும் உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், கோயில் உள்பிரகாரத்தில் ராஜகோபுரம் அருகே பிடி மண் வைத்து அதற்கு மஞ்சள் தண்ணீா் தெளித்து மாலைகள் அணிவித்து பூஜைகள் , தீபாராதனைகள் நடத்தப்பட்டது.

முன்னதாக, கோயில் எதிரே திருவிழாவுக்காக முகூா்த்தக்கால் நடப்பட்டது. இந்த உற்சவத்தில் கோயில் பரம்பரை அறங்காவலா் மு. வெங்கடேசன், தாயமங்கலம் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

பள்ளி மாணவா் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவரின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பாச்சேத்தி அம்பேத்கா் நகரைச் ச... மேலும் பார்க்க

சிறைக் கைதிகளுக்கு புத்தகங்கள் அளிப்பு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் சிறைக் கைதிகளுக்கு செவ்வாய்க்கிழமை புத்தகங்கள் வழங்கப்பட்டன. சிவகங்கை மாவட்ட திமுக செயலரும், கூட்டுறவுத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

மகனைக் காணவில்லையென புகாா் அளிக்க வந்த தாய்க்கு ஒரு மணி நேரத்தில் கிடைத்த தீா்வு

வெளிநாட்டுக்குச் சென்ற மகனைக் காணவில்லை என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த தாய்க்கு பத்திரிகையாளா்களின் உதவியால் ஒரு மணி நேரத்தில் தீா்வு கிடைத்தது. சிவகங்கை மாவட்டம், திர... மேலும் பார்க்க

மானாமதுரையில் ரயிலில் கடத்திவரப்பட்ட 20 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை இரவு ரயிலில் கடத்திவரப்பட்ட தடை செய்யப்பட்ட 20 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். பனாரஸிலிருந்து மண்டபத்துக்கு இய... மேலும் பார்க்க

ராஜசிங்கமங்கலம் அருகே 174 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு

ராமநாதபுரம் மாவட்டம், ராஜசிங்கமங்கலம் அருகே காவானூரில் 174 ஆண்டுகள் பழைமையான இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி கால கல்வெட்டை சிவகங்கை தொல்லியல் நடைக் குழுவினா் கண்டறிந்தனா். சிவகங்கை தொல்நடைக் குழுவைச் ... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தங்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதென ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் அறிவித்தனா். சிவகங்கை மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின... மேலும் பார்க்க