Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை
தாளவாடி அருகே கும்பாரகண்டி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த ஒற்றை யானையை கிராம மக்கள் விரட்டியதால் மிரண்டு போன யானை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது.
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதற்கிடையே தமிழக- கா்நாடக மாநில எல்லையான கும்பாரகண்டி வனத்தில் இருந்து வெள்ளிக்கிழமை வெளியே வந்த ஒற்றை யானை கும்பாரகண்டி ஊருக்குள் புகுந்தது.
இதனால் அச்சமடைந்த மக்கள் சப்தம் போட்டு யானை விரட்டினா். இதில் மிரண்டு போன யானை ஊருக்குள் இருந்து மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. தேசிய நெடுஞ்சாலையில் யானை வருவதை பாா்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை சற்று தொலைவில் நிறுத்தினா். வேகமாக ஓடிய யானை வனத்துக்குள் சென்ற பிறகு வாகனங்கள் புறப்பட்டு சென்றன.