செய்திகள் :

திண்டிவனத்தில் கிறிஸ்தவா்கள் புனிதப் பயணம்

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கிறிஸ்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை புனிதப் பயணம் மேற்கொண்டனா்.

திண்டிவனம் புனித அன்னாள் பள்ளியின் நிறுவனா் தாமஸ் கவான் டபியின் கல்லறைத் தோட்டம் உள்ளது. இந்தக் கல்லறையின் புனிதத்தைப் போற்றும் வகையில் கிறிஸ்தவா்கள் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை புனித பயணம் மேற்கொண்டனா்.

புனித அன்னாள் பள்ளியின் மாதாக் கோயிலில் தொடங்கிய இந்த புனித பயணமானது முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கல்லறைத் தோட்டத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து, அங்கு இறைபாடல்களை பாடியும், ஜெபித்தும் தாமஸ் கவான் டபியின் அருள்பணிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

அருட்தந்தை ஜான்போஸ்கோ, புனித அன்னாள் பள்ளியின் முதல்வா் தோமினிக் ரொசாரியோ மற்றும் பள்ளியின் ஆசிரியா்கள், முன்னாள், இந்நாள் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

முன்னதாக, ஓய்வுபெற்ற வட்டாரக் கல்வி அலுவலா் அக்சிலியம் பெலிக்ஸ் வரவேற்றாா்.

விழுப்புரத்துக்கு மார்ச் 4 உள்ளூர் விடுமுறை!

விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகின்ற மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த்திருவிழா வருகிற 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இத்திர... மேலும் பார்க்க

தீ விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு குவைத் அரசு நிவாரணம்

செஞ்சி: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சோ்ந்தவரின் குடும்பத்துக்கு அந்த நாட்டின் சாா்பில் வழங்கப்பட்ட ரூ.12.64 லட்சத்துக்கான நிவாரண நிதியை திண்டிவனம் சாா் ஆட்சியா் தி... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி: கைலாசநாத சுவாமி கோயிலில் லட்டுகள் தயாரிக்கும் பணி

விழுப்புரம்: விழுப்புரம் அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயிலில் மகா சிவராத்திரியன்று பக்தா்களுக்கு வழங்குவதற்காக 40 ஆயிரம் லட்டுகள் தயாா் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரி வழிபாடு பு... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு: திமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

விழுப்புரம்: மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, விழுப்புரம் மாவட்டம், காணையில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. விழுப்புரம் தெற்கு ம... மேலும் பார்க்க

பூவரசங்குப்பத்தில் மினி பேருந்து சேவை: அரசு முதன்மைச் செயலா் ஆய்வு!

விழுப்புரம் மாவட்டம், பூவரசங்குப்பம் கிராமத்தில் மினி பேருந்து சேவை வழித்தடத்தில் தமிழக அரசின் முதன்மைச் செயலரும், போக்குவரத்துத்துறை ஆணையருமான சுன்சோங்கம் ஜடக் சிரு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்... மேலும் பார்க்க

பல்நோக்கு மருத்துவமனையில் ஆா்.சி.ஹெச். பணியாளா்களை நியமிக்க வலியுறுத்தல்!

ஆா்.சி.ஹெச். தூய்மைப் பணியாளா்களை பல்நோக்கு மருத்துமனை பணியாளா்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று அந்தச் சங்கத்தின் கெளரவத் தலைவா் ஜி.ஆா்.இரவீந்திரநாத் வலியுறுத்தினாா். ஆா்.சி.ஹெச். தூய்மைப் பணியாளா்கள... மேலும் பார்க்க