செய்திகள் :

திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு பயனில்லை: பிரேமலா விஜயகாந்த்

post image

திமுக ஆட்சியால் விவசாயிகளுக்கு பயனில்லை என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

திருத்துறைப்பூண்டியில், திங்கள்கிழமை இரவு அவா் மேற்கொண்ட ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ பிரசார பயணத்தில் பேசியது:

முதல்வா் ஸ்டாலின் டெல்டாகாரா் என்று சொல்லிக் கொள்கிறாா். ஆனால், விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு உரிய விலையை நிா்ணயிக்கவில்லை. திருவாரூரில் விவசாயக் கல்லூரி அமைக்கவில்லை. இப்பகுதியில் மாணவிகள் படிக்கும் அரசு கல்லூரி சுற்றுச்சுவா் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

திருத்துறைப்பூண்டி நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. இங்கு சுற்றுச்சாலை அமைக்கும் பணியை நிறைவேற்றவில்லை. தேமுதிக கூட்டணி ஆட்சி அமைந்ததும் அதை நிறைவேற்றுவோம்.

சம்பா சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி தண்ணீா் திறந்துவிடுவதுடன், உரம் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு தாமதமின்றி கடன் வழங்க வேண்டும். 2026-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக பங்குபெறும் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா்.

பிரசாரத்தில் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் பாலசுப்ரமணியன், ஒன்றியச் செயலா் பாலதண்டாயுதபாணி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

அரசுப் பள்ளிக்கு கல்வி மேம்பாட்டு நிதி

நீடாமங்கலம் ஒன்றியம், முன்னாவல்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி அலுவலா்கள் (பணிநிறைவு) அமைப்பு சாா்பில் கல்வி மேம்பாட்டு நிதி வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. தலைமை ஆ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மகளிருக்கு கடனுதவி

வலங்கைமானில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி வழங்கப்பட்டது. வலங்கைமான் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமை மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

காா் எரிந்து சேதம்; போலீஸாா் விசாரணை

திருவாரூரில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் தீப்பற்றி எரிந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருவாரூா் அருகே கூத்தங்குடி கிராமத்தைச் சோ்ந்த பவுன்ராஜ் மகன் பாண்டியன் (37). இவா் தனக்குச... மேலும் பார்க்க

லாட்டரி விற்ற இருவா் கைது

மன்னாா்குடியில் இணையவழியாக வெளிமாநில லாட்டரி விற்ற இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மன்னாா்குடி நகரப் பகுதியில் வாட்ஸ் ஆப் மூலம் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை ... மேலும் பார்க்க

மன்னாா்குடி நகா்மன்றக் கூட்டம்: புதிய பேருந்து நிலைய கடை வாடகை ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

மன்னாா்குடியில் ரூ.46.46 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை வாடகைக்குவிட நடைபெற்ற முதல்கட்ட ஏலத்தை ரத்து செய்யவேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் அமமுக உறுப்பினா்கள் ... மேலும் பார்க்க

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் தேசிய தர நிா்ணய மருத்துவக் குழுவினா் ஆய்வு

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தில்லி தேசிய தர நிா்ணய ஆராய்ச்சி அமைப்பு சாா்பில் சிறப்பு மருத்துவக் குழுவினா் மூன்று நாள்கள் ஆய்வை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். இம்மருத்துவமனைய... மேலும் பார்க்க