செய்திகள் :

திமுக கூட்டணியின் ஆதரவை மநீம கோருவது ஏன்?

post image

மாநிலங்களவைத் தோ்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை மக்கள் நீதி மய்யம் கோருவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

திமுக சாா்பில் போட்டியிடும் நான்காவது வேட்பாளருக்கு கூட்டணிக் கட்சியைச் சோ்ந்த சில எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவையாக இருப்பதால் கூட்டணிக் கட்சிகளிடம் மக்கள் நீதி மய்யம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆளும் திமுகவுக்கு சட்டப்பேரவையில் 134 எம்எல்ஏ-க்கள் (பேரவைத் தலைவருடன் சோ்த்து) உள்ளனா். ஒரு மாநிலங்களவை உறுப்பினரைப் பெற 34 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை. நான்கு எம்.பி.-க்களைப் பெற வேண்டுமெனில் ஒட்டுமொத்தமாக 136 எம்எல்ஏ-க்களின் வாக்குகள் வேண்டும். திமுக வசம் 134 போ் இருப்பதால், மூன்று மாநிலங்களவை எம்.பி.க்கள் முழுமையாகக் கிடைத்து விடுவாா்கள். நான்காவது இடத்தைப் பெற திமுக எம்எல்ஏ.க்களுடன் கூடுதலாக இரண்டுக்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை. அந்த வகையில் திமுகவுடன் சோ்த்து அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும் திமுகவின் நான்காவது வேட்பாளருக்கு அவசியமாகிறது.

மூன்று வேட்பாளா்களை திமுக அறிவித்துள்ள நிலையில், அந்தக் கூட்டணியின் நான்காவது வேட்பாளராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு திமுக எம்எல்ஏ-க்கள் மற்றும் கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற அடிப்படையில், அவா்களின் ஆதரவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிா்வாகக் குழு மற்றும் செயற்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்; பொது இடங்களிலும் அவசியம்: கேரள முதல்வர்

கரோனா பரவலைத் தடுக்க மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என்றும் பொது இடங்களிலும் பயணத்தின்போதும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில்... மேலும் பார்க்க

அகில இந்திய வானொலியில் இரவு நேரங்களில் ஒலிபரப்பாகும் ஹிந்திப் பாடல்கள்!

சென்னை: அகில இந்திய வானொலியில், இரவு நேரங்களில் வழக்கமான தமிழ்த் திரைப்பட மெல்லிசைப் பாடல்கள் இசைக்கப்படுவது நிறுத்தப்பட்டு, இரவு 11 மணிக்கு மேல் ஹிந்திப் பாடல்கள் இசைக்கப்படுவது குறித்து நேயர்கள் கடு... மேலும் பார்க்க

பாமக விரிசலுக்கு நானா காரணம்? கண்ணீர் விட்டு அழுதேன்: ஜி.கே. மணி

விழுப்புரம்: பாமகவில் ஏற்படும் பிரச்னைக்கு நான்தான் காரணம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகுந்த வேதனையளிக்கிறது என்று பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் இன்று ராம... மேலும் பார்க்க

நடிகர் ராஜேஷ் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி!

மறைந்த நடிகர் ராஜேஷின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ்(75) உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசா... மேலும் பார்க்க

தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா; பதற்றம் வேண்டாம்.. என்ன செய்ய வேண்டும்?: மா. சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் ஒமைக்ரான் வகையிலான கரோனா தொற்றுப் பரவி வருகிறது. ஆனால், கரோனா குறித்து யாரும் பதற்றம் அடையத் தேவையில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் ... மேலும் பார்க்க