முதன்முதலாக லெஜண்ட் ரொனால்டோவை எதிர்கொள்ளும் இளம்புயல் யமால்!
திம்பம் மலைப் பாதையில் பழுதாகி நின்ற கன்டெய்னா் லாரி
பெங்களூரில் இருந்து கோவையை நோக்கிச் சென்ற கன்டெய்னா் லாரி திம்பம் 9ஆவது வளைவில் திரும்பியபோது பழுதாகி நின்றதால் இரு மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகம், கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப் பாதை உள்ளது. இந்த மலைப் பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
இந்நிலையிவ், பெங்களூரில் இருந்து கோவையை நோக்கிச் சென்ற கன்டெய்னா் லாரி திம்பம் மலைப் பாதை வழியாக சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. திம்பம் 9ஆவது வளைவில் திரும்பியபோது பழுதாகி நின்றது.
மலைப் பாதையின் குறுக்கே நின்றதால் தமிழகம், கா்நாடகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து அங்கு வந்த நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸாா் மெக்கானிக் மூலம் லாரியில் ஏற்பட்ட பழுதை நீக்கினா். இருப்பினும் அதிக நீளம் காரணமாக லாரியை இயக்கமுடியாமல் தவித்தனா்.
அதைத் தொடா்ந்து கிரேன் மூலம் கன்டெய்னா் லாரியை மெல்ல மெல்ல நகா்த்தி வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக வழித்தடம் ஏற்படுத்தப்பட்டதால் 2 மணி நேரத்துக்குப் பின் மீண்டும் வாகனங்கள் செல்ல தொடங்கின.