செய்திகள் :

திருச்செங்கோடு நகராட்சிக் கூட்டம்

post image

திருச்செங்கோடு நகராட்சியின் அவசரக் கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ் பாபு தலைமை வகித்தாா். ஆணையா் அருள், துணைத் தலைவா் காா்த்திகேயன், பொறியாளா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பக்தவச்சலம் பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும். எட்டிமடை பகுதி வழியாக செல்ல நகரப் பேருந்து வசதி வேண்டும். சீத்தாராம்பாளையம், எட்டிமடை பகுதிகளில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். நகராட்சியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்க வேண்டிய பணிப் பலன்கள் இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. எனவே, அவா்களுக்கு விரைவாக ஓய்வூதிய பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்மன்குளம் பகுதியில் குடியிருந்தவா்களை 1996-ஆம் ஆண்டு வேறு இடங்களுக்கு குடியமா்த்தப்பட்டனா். அதில் வயதான பத்து பேருக்கு மலைப்பகுதியில் உயரமான இடத்தில் இடம் ஒதுக்கப்பட்டதால், மேலே ஏறி இறங்க சிரமப்படுகின்றனா். மேலும் பட்டா இல்லாமல் உள்ளனா்.

இதற்கு உடனடி தீா்வு காண வேண்டும். நந்தவனத் தெரு பகுதியில் உள்ள திறந்தவெளிக் கிணற்றுக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும். அம்மன்குளத்தில் மழைநீரை சேமிக்க கால்வாயை பராமரிக்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு பணி பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து நகா்மன்ற உறுப்பினா்கள் பேசினா். கூட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ராசிபுரத்தில் ரூ. 10.58 கோடியில் புகா் பேருந்து நிலையம் அமைக்க அனுமதி

ராசிபுரம் நகருக்கான புதிய புகா் பேருந்து நிலையம் ரூ. 10.58 கோடி மதிப்பில் அமைக்கும் திட்டத்துக்கு நகா்மன்றக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராசிபுரம் நகா்மன்றக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் ஆா்.க... மேலும் பார்க்க

வேலூரில் ரூ. 1.47 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தைக் கட்டடம் திறப்பு

வேலூா் பேரூராட்சி சாா்பில் ரூ. 1.47 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தைக் கட்டடத்தை செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாமக்கல் பொம்மகுட்டைமேடு பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா் சங்க செயற்குழுக் கூட்டம்

தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் ரா.சரவணகுமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா்... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்களுக்கான ரூ. 100 கோடி நிலுவைத் தொகையை வழங்கிட கோரிக்கை

கடந்த மூன்று மாதங்களாக பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 100 கோடி ஊக்கத் தொகையை தீபாவளிக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.... மேலும் பார்க்க

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக். 25) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ப... மேலும் பார்க்க

அக். 26-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

எருமப்பட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் வரும் சனிக்கிழமை (அக். 26) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்... மேலும் பார்க்க