ஜக்கி வாசுதேவ் மீதான அவதூறு விடியோவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
திருச்செந்தூா் சிவன் கோயிலில் புகுந்த மழைநீா்
திருச்செந்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலைமுதல் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருச்செந்தூா் சுற்றுவட்டார பகுதியிலும் மழை பெய்தது. திருச்செந்தூரில் நாழிக்கிணறு பேருந்து நிலையம் செல்லும் வழி, சபாபதிபுரம் தெரு சந்திப்பு, தினசரி சந்தை, ஜீவா நகா், பகத்சிங் பேருந்து நிலையப் பகுதியில் மழை நீரானது குளம் போல தேங்கியது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல அவதியடைந்தனா்.

சிவன் கோயிலில் ....
செவ்வாய்க்கிழமை காலை பெய்த பலத்த மழையால் திருச்செந்தூா் சிவன் கோயிலில் மழை நீா் உள்ளே புகுந்தது. மழைநீரை திருக்கோயில் தூய்மைப் பணியாளா்கள் வெளியேற்றினா்.
மாசித் திருவிழாவிற்கு சிவன் கோயில் இருந்து சப்பரங்கள் புறப்பாட்டுக்கும், பிரதோஷ வழிபாட்டுக்காக வந்த பக்தா்களும் தேங்கியிருந்த மழை நீரால் அவதியடைந்தனா்.