செய்திகள் :

திருப்பூர்: 'இன்ஸ்டாகிராம் லின்க்கால் ரூ.22 லட்சம் போச்சு' - பறிகொடுத்த இளைஞர்; எச்சரிக்கும் போலீஸ்

post image

திருப்பூரைச் சேர்ந்தவர் முனிவேலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பங்குச்சந்தை முதலீடு தொடர்பான விளம்பரம் ஒன்று வந்துள்ளது.

அதற்குள் சென்ற முனிவேல், அதில் இணைக்கப்பட்ட வாட்ஸ் ஆஃப் லிங்க் மூலம் குழுவில் இணைந்தார். அந்தக் குழுவில் ஈரோட்டைச் சேர்ந்த நவனீஷ் என்பவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அதை உண்மையென நம்பி, பல தவணைகளாக ரூ. 22.25 லட்சம் வரை முனிவேல் முதலீடு செய்துள்ளார்.

முதலீட்டைத் திரும்ப பெற முயலும்போது, மேலும் பணத்தைச் செலுத்துமாறு நவனீஷ் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து முனிவேல் விசாரித்தபோது, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளார்.

இதுதொடர்பாக திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸில் முனிவேல் புகார் அளித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில், முனிவேல் அனுப்பிய பணம் எலைட் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தின் வங்கிக் கணக்குக்குச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் பங்குதாரரான ஈரோட்டைச் சேர்ந்த நவனீஷ் கைது செய்யப்பட்டார். அவரது இரண்டு மொபைல் போன்கள், வங்கிக் கணக்கு ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைது
கைது

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "இந்த மோசடி குறித்து விசாரித்தபோது, டெலிகிராம் மூலம் அறிமுகமான மிஸ்டர் ஜீ மற்றும் இலங்கையில் வசிக்கும் நவனீஷின் மாமா சுதர்சன் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் நவனீஷ் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக நவனீஷ் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெற்றதும் தெரியவந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வரும் பங்குசந்தை முதலீட்டுக்கான எந்த விளம்பரங்களையும் நம்பி பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

தெலங்கானா: 'ரூ.500 முதல் ரூ.2000 வரை கட்டணம்' - தங்களுடைய ஆபாச வீடியோக்களை இணையத்தில் விற்ற தம்பதி

தெலங்கானாவில் வீட்டிலிருந்தபடி சட்டவிரோதமாக ஆபாசப் படங்களை உருவாக்கி, அதற்காக பணம் பெற்ற தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐதராபாத்தில் உள்ள ஆம்பர்பேட்டையில் வீட்டிலிருந்தே தம்பதிகள் ஆபாசப் படங்களை... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை?; துணிச்சலுடன் போராடியதால் தப்பித்தார் - நடந்தது என்ன?

சென்னை ஐஐடி-யில் 20 வயதான இளம்பெண் ஒருவர் Internship-க்கு வந்திருக்கிறார். இதற்காக அவர் ஐஐடி வளாகத்திலேயே தங்கியிருக்கிறார். கடந்த 25.6.2025-ம் தேதி இரவில் ஐஐடி வளாகத்தில் அவர் தனியாக நடந்துச் சென்றார... மேலும் பார்க்க

3-வது மனைவியைக் கொன்று 23 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை.. 75 வயது முதியவர் சிக்கியது எப்படி?

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் தனது மூன்றாவது மனைவியைக் கொன்றுவிட்டு 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 75 வயது முதியவரை போலீஸார் தற்போது கைது செய்திருக்கின்றனர்.போலீஸாரின் கூற்றின்படி, ஹனுமந்தப்பா எ... மேலும் பார்க்க

'கிளர்க் பணிக்கு ரூ.3 லட்சம்' - அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி; கல்லூரி பேராசிரியர் இடை நீக்கம்

திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அரசுப் பேருந்து நடத்துநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் பழைய வத்தலகுண்டைச் சேர்ந்த தனபால் என்பவரின் மனைவி ராஜேஸ்வரிக்கு திண்டுக்கல்... மேலும் பார்க்க

மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு - சென்னை சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை!

'இரு மதங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை பரப்பியதாக' மதுரை ஆதீனம் மீது சென்னை கிழக்கு மண்டல சைஃபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள... மேலும் பார்க்க

ரஷ்யா: கோமாவில் ஒன்றரை வயது குழந்தை; இரக்கமின்றி தாக்கிய கொடூரன்; அதிர்ச்சி வீடியோ - என்ன நடந்தது?

ரஷ்யாவின் விமான நிலையம் ஒன்றில் சுற்றுலா பயணி ஒருவர் ஒன்றரை வயது குழந்தையை தரையில் அடித்ததால் குழந்தை கோமா நிலைக்குச் சென்றுள்ளது. குழந்தையின் கபாளத்தில் முறிவு மற்றும் முதுகுத்தண்டில் காயங்கள் ஏற்பட்... மேலும் பார்க்க