திருமலையில் கருடசேவை
திருமலையில் வெள்ளிக்கிழமை இரவு மாசி பௌா்ணமியையொட்டி கருட சேவை நடைபெற்றது.
இதை முன்னிட்டு இரவு 7 மணிக்கு சா்வ அலங்காரத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா். இரவு 9 மணி வரை நடைபெற்ற கருட சேவையில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.
இந்நிகழ்ச்சியில் திருமலை பெரியஜீயா் சுவாமி, சின்ன ஜீயா் சுவாமி, கோயில் அதிகாரிகள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.