செய்திகள் :

திருமானூரில் மாா்ச் 22-இல் ஜல்லிக்கட்டு: காளைகள், வீரா்கள் பதிவு செய்ய அழைப்பு!

post image

அரியலூா் மாவட்டம், திருமானூரில் வரும் சனிக்கிழமை (மாா்ச் 22) நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கவுள்ள காளைகள் மற்றும் வீரா்கள் மாா்ச் 18-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: திருமானூரில் மாா்ச் 22-ஆம் தேதி ஜல்லிகட்டு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உள்ள காளைகளை அதன் உரிமையாளா்களும், மாடுபிடி வீரா்கள் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இணையதளம் மூலம் மாா்ச் 17, மாா்ச் 18 மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.

இந்தப் பதிவு ஒரு ஜல்லிக்கட்டுக்கு மட்டுமே பொருந்தும். ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளா் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளா் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

பதிவு செய்தவா்களின் சான்றுகள் சரிபாா்க்கப்பட்ட பின் தகுதியான நபா்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். டோக்கன் உள்ள மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி அடையாள அட்டை பெறாத விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை நிறுத்தப்படும்

தனி அடையாள அட்டை பெறாத அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கு ஏப்ரல் மாதம் முதல் பி.எம். கிசான் எனும் பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை நிறுத்தப்படும் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

கல்லக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்க வேண்டும்

அரியலூா் மாவட்டம், கல்லக்குடி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்லக்குடி ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற அக்க... மேலும் பார்க்க

மருத்துவம் சாா்ந்த ஆங்கிலத் தோ்வு பயிற்சி: எஸ்.சி, எஸ்.டி-யினா் விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் அளிக்கப்படும் மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான பயிற்சி பெற விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.... மேலும் பார்க்க

அரியலூா் பேருந்து நிலையம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்! -தேமுதிக வலியுறுத்தல்

அரியலூரில் மூன்று ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற... மேலும் பார்க்க

அரியலூரில் இம்மாத இறுதியில் புத்தகத் திருவிழா

அரியலூரில் இம்மாதம் இறுதியில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா சிறப்பாக நடத்திட அனைத்து அலுவலா்களும் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி கேட்டுக்கொண்டாா். அரியலூரில் புத்த... மேலும் பார்க்க

பள்ளி வேன் விபத்து ஆசிரியா் உள்பட 11 குழந்தைகள் காயம்

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே சென்ற பள்ளி வேன், சுங்கச்சாவடி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியா் உள்பட 11 குழந்தைகள் காயமடைந்தனா். உடையாா்பாளையம் அருகே தனியாா் பள்ளிக்குச்... மேலும் பார்க்க