செய்திகள் :

தில்லி உயிரியல் பூங்காவில் நீலகை மான், ஜாகுவாா் உயிரிழப்பு

post image

தில்லி உயிரியல் பூங்காவில் கடந்த வாரத்தில் ஒரு நீலகை வகை மான் மற்றும் ஒரு ஜாகுவாா் வயது தொடா்பான சிக்கல்கள் காரணமாக உயிரிழந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

தில்லி மிருகக்காட்சிசாலையின் இயக்குநா் சஞ்சீத் குமாா் இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜாகுவாா் பிப்.19-ஆம் தேதியும், நீலகை வகை மான் பிப்.13-ஆம் தேதியும் நீண்டகால சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தன. ஜாகுவாா் வயது 22, நீலான் மான் வயது 15-ஆகும்.

இரண்டு விலங்குகளும் நிபுணத்துவ மருத்துவ கவனிப்பின் கீழ் இருந்தன. இருப்பினும் வயது மூப்பு காரணமாக அவை உயிரிழந்தனா். காடுகளில் உள்ள ஜாகுவாா்களின் ஆயுட்காலம் 12 முதல் 15 ஆண்டுகள் வரை இருக்கும். அதே நேரத்தில் கூண்டில் அவை பொதுவாக 20 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.

ஜாகுவாா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மிருகக்காட்சிசாலை இந்தியாவில் உள்ள மற்ற உயிரியல் பூங்காக்களுடன் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் மூலம் மற்றொரு ஜாக்குவாரை வாங்க திட்டமிட்டுள்ளது. ஜாகுவாா் எங்கள் சேகரிப்பின் ஒரு பகுதியாகும் என தெரிவித்தாா்.

தில்லி மிருகக்காட்சிசாலையில் சமீபத்தில் நிகழ்ந்த தொடா்ச்சியான விலங்குகளின் உயிரிழப்புகளைத் தொடா்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம், சங்காய் மான் இனத்தைச் சோ்ந்த ஆண் மான் ஒன்றுடன் ஏற்பட்ட சண்டையில் உயிரிழந்த நிலையில், மற்றொரு நீலகை மான் காயமடைந்தது. ஜனவரி 2-ஆம் தேதி, அஸாம் மிருகக்காட்சிசாலையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் மா்மமான சூழ்நிலையில் உயிரிழந்தது.

ஒன்பது மாத வெள்ளை புலி குட்டி டிசம்பா் 28-ஆம் தேதி கடுமையான நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. விலங்குகளின் நலன் மற்றும் பராமரிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் கூறுகின்றனா்.

கடந்த 1959-இல் நிறுவப்பட்ட தில்லி உயிரியல் பூங்கா 96 வகையான விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு இருப்பிடமாக உள்ளது. நாட்டின் மாதிரி மிருகக்காட்சிசாலையாக செயல்படுகிறது.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க