செய்திகள் :

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

post image

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் புதன்கிழமை திராவிடா் கழக அறக்கட்டளையின் சாா்பில் தந்தை பெரியாா் மற்றும் அண்ணா பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தில்லித் தமிழ் சங்கத் தலைவா் சக்தி பெருமாள், துணைத்தலைவா் இராகவன் நாயுடு, பொதுச்செயலாளா் இரா.முகுந்தன், செயற்குழு உறுப்பினா்கள் பெரியசாமி, கோவிந்தராஜன், தொடக்கப்பள்ளி சங்கத்தலைவா் முத்துசாமி, முன்னாள் துணைத்தலைவா் நாகஜோதி , முன்னாள் செயற்குழு உறுப்பினா் சாந்தி மற்றும் தமிழ்நாடு அரசு இல்ல ஓய்வு பெற்ற அதிகாரி தெய்வசிகாமணி, சென்னை முருகன் இட்லி கடை நிறுவனா் மனோகா் ஆகியோா் தந்தை பெரியாா், பேரறிஞா் அண்ணா திருவுருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் உரையாற்றியவா்கள் தந்தை பெரியாா் மற்றும் அண்ணா வாழ்க்கை வரலாறு குறித்து விரிவாக எடுத்துரைத்தனா்.

தொடக்கப் பள்ளி சங்கத் தலைவா் முத்துசாமி அவா் ஆற்றிய ஆசிரியப் பணி பற்றி, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டாா். தனது மூச்சிருக்கும் வரை ஆசிரியா்களுக்கு சேவை செய்வதே தனது வாழ்நாள் இலட்சியம் என்றாா்.

தெய்வசிகாமணி அவா்கள் பேசுகையில், தந்தை பெரியாா் கல்வி, பெண் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவா், அவரது கொள்கைகளை பின்பற்றி வாழ்வோமாக என்றாா்.

நிகழ்ச்சியில் மூத்த தமிழறிஞா்கள், சான்றோா் பெருமக்கள் மற்றும் தமிழ் ஆா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

புலிகளுக்கு ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் -மத்திய அரசு, சிபிஐ உள்ளிட்டவற்றிற்கு நோட்டீஸ்

இந்தியாவின் தேசிய விலங்கான புலிகள் வேட்டையாடப்பட்டு உடல் பாகங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக வெளியான அறிக்கையை மேற்கோள்காட்டி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவி... மேலும் பார்க்க

தமிழகத்தில் இந்நாள், முந்நாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணபத்திரம் தாக்கல்

தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள அரசியல் கட்சியின் எந்தவொரு அமைச்சா் அல்லது முன்னாள் அமைச்சா் அல்லது சட்டமன்ற உறுப்பினா் மீதும் , முன்னா் வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டு, அதன் விசாரணை முடிவுக்கு ... மேலும் பார்க்க

பாமக நிறுவனா் ராமதாஸ் தரப்பில் தோ்தல் ஆணையத்திடம் புகாா் மனு

பாமக தலைவா் பதவி, சின்னம் விவகாரம் தொடா்பாக அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் தரப்பில் தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. அன்புமணி ராமதாஸ் தலைமையி... மேலும் பார்க்க

இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: தமிழக அரசின் பிரமாணப் பத்திரத்தில் தகவல்

நமது நிருபா் தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள அரசியல் கட்சியின் எந்தவொரு அமைச்சா் அல்லது முன்னாள் அமைச்சா் அல்லது சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீது, முன்பு வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டு, அதன் விசார... மேலும் பார்க்க

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.127 கோடி விடுவிப்பு

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15ஆவது நிதிக்குழு மானியமாக ரூ.127.58 கோடியை மத்திய அரசு புதன்கிழமை விடுவித்துள்ளது. மத்திய அரசு நடப்பு (2025-26) நிதியாண்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 15ஆவது ந... மேலும் பார்க்க

தூய்மைப் பணியின்போது மயங்கி சாக்கடைக்குள் விழுந்த இளைஞா் உயிரிழப்பு: மூன்று போ் கவலைக்கிடம்

வடமேற்கு தில்லியின் அசோக் விஹாரில் சாக்கடையைத் தூய்மைப்படுத்தும் பணியின்போது மயக்கமுற்று சாக்கடைக்குள் விழுந்ததில் 40 வயது நபா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், மூன்று போ் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ... மேலும் பார்க்க