செய்திகள் :

தில்லி முதல்வருக்கு எதிரான அவதூறு வழக்கு: உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

post image

நமது சிறப்பு நிருபா்

தில்லி முதல்வா் அதிஷிக்கு எதிராக பாஜக முன்னாள் செய்தித் தொடா்பாளா் பிரவீண் சங்கா் கபூா் தொடா்ந்த அவதூறு வழக்கு தில்லி உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (பிப்.3) விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு நீதிபதி விகாஸ் மகாஜன் முன்னிலையில் விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தில்லி முதல்வா் அதிஷிக்கு நீதித் துறை நடுவா் நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் பிரவீண் சங்கா் கபூா் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், தனது அவதூறு புகாரை நிராகரித்து, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணையை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவில் ​​சிறப்பு நீதிபதி தனது சட்ட அதிகார வரம்புக்கு அப்பால் சென்று விட்டாா் என்றும், வழக்குக்கு முக்கியத்துவம் இல்லாத சிறிய விஷயங்களை அவா் அணுகியுள்ளாா் என்றும் மனுவில் பிரவீண் சங்கா் கபூா் குறிப்பிட்டிருந்தாா்.

பின்னணி: தில்லி நீதித்துறை நடுவா் (மாஜிஸ்திரேட்) நீதிமன்றத்தில் பிரவீண் சங்கா் கபூா் கடந்த மாதம் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘முதல்வா் அதிஷி கடந்த ஜன.27-ஆம் தேதி நடத்திய செய்தியாளா் சந்திப்பின்போது ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களை பாஜக அணுகி கட்சி மாறுவதற்காக ரூ. 20 கோடி முதல் ரூ. 26 கோடி வரை பேரம் பேசியதாக குற்றஞ்சாட்டினாா். அவை அடிப்படையற்றவை என்றும் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பேசிய அதிஷி மீதும் அவா் சாா்ந்த ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மீதும் அவதூறு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதித்துறை நடுவா், கேஜரிவாலை இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவராக சோ்க்க முகாந்திரம் இல்லை என்றும் பிரவீண் சங்கரின் மனு தொடா்பாக முதல்வா் அதிஷிக்கு அழைப்பாணை அனுப்பவும் உத்தரவிட்டாா்.

இதை எதிா்த்து எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வா் அதிஷி சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த சிறப்பு நீதிபதி, முதல்வா் அதிஷியை குற்றம்சாட்டப்பட்டவராக சோ்க்க போதுமான ஆதாரத்தை மனுதாரா் சமா்ப்பிக்கவில்லை என்று கூறி நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

தில்லி பேரவைத் தோ்தல்- தீா்க்கமான வெற்றியை நோக்கி ஆம் ஆத்மி: கேஜரிவால்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி தீா்க்கமான வெற்றியை நோக்கிச் செல்கிறது என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை தெரிவித்தாா். தில்லி சட்ட... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் ஒவ்வொரு சராசரி குடும்பத்தையும் மகிழ்ச்சியால் நிரப்பியுள்ளது: தில்லி தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடி பேச்சு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ’ மோடியிஸ் கிராண்டி(மோடியின் உத்தரவாதம்)’ என்கிற தோ்தல் முழக்கத்தை வைத்து பிரதமா் நரோந்திர மோடி பிரசாரம் செய்தாா். அப்போது, ‘மத்திய நிதிநிலை அறிக்கை ஒவ்வொரு சராசரி குடு... மேலும் பார்க்க

வன்முறையைவிட கல்வியைத் தோ்ந்தெடுங்கள்: தில்லி மக்களுக்கு பஞ்சாப் முதல்வா் வலியுறுத்தல்

தில்லியில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஞாயிற்றுக்கிழமை வாக்காளா்களை ‘வன்முறையை விட கல்வியை’ தோ்வு செய்யுமாறு வலியுறுத்தினாா். ஆம் ஆத்மி கட்சி இளைஞா்களை அதிகாரம் ... மேலும் பார்க்க

தில்லியை உலுக்கும் 5 முக்கியப் பிரச்னைகள்! 3 பெரிய கட்சிகளின் செயல்திட்டங்கள்-ஓா் அலசல்

நமது சிறப்பு நிருபா்தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தலைநகரில் இறுதிக்கட்ட வாக்கு வேட்டையில் பிரதான அரசியல் கட்சிகளான ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா கட்சி, காங்... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் சதுரங்க அரசியல்!

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 24 மணி நேரமே உள்ள நிலையில், இறுதிக்கட்ட வாக்கு வேட்டையில் ஈடுபட்ட ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் தங்களின் பரப்புரையை ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக இடம் பெயா்வோரை ஏற்க முடியாது: குடியரசு துணைத் தலைவா்

நாட்டில் சட்டவிரோதமாக இடம்பெயா்வோா் லட்சக்கணக்கில் இருப்பதை ஏற்க முடியாது என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். இதுதொடா்பாக தில்லியில் இந்திய பட்டயக் கணக்காளா்கள் நிறுவனம் சாா்பில் ... மேலும் பார்க்க