செய்திகள் :

தில்லி முதல்வர், அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள்!

post image

தில்லி முதல்வர், அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 இடங்களில் வென்ற பாஜக, ஆம் ஆத்மியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியமைத்துள்ளது. தில்லி முதல்வரை தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில், முதல்வராக ரேகா குப்தா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தில்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார்.

சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோருக்குப் பிறகு நான்காவது பெண் முதல்வர் என்கிற பெருமையை ரேகா குப்தா பெற்றுள்ளார். தில்லி அமைச்சர்களாக பர்வேஷ் வர்மா, ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்ஷா, ரவீந்தர் இந்தரராஜ் சிங், கபில் மிஸ்ரா மற்றும் பங்கஜ் குமார் சிங் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். பர்வேஷ் வர்மா துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தில்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் பதவியேற்றுக்கொண்ட 7 அமைச்சர்களில் 5 அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தேர்தல் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க...தில்லி அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கீடு!

இந்தக் குற்றவழக்குகளில் தில்லி முதல்வர் ரேகா குப்தாவும் மிக முக்கியமானவராகவும், அமைச்சர் ஆஷிஷ் சூட் அதிக குற்றவழக்குகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சமர்ப்பிக்கப்பட்ட சுய பிரமாணப் பத்திரங்கள் மூலமாக இந்த வழக்குகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நிதித்துறையில் உள்ள இரண்டு அமைச்சர்கள் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துகளை கொண்டுள்ளனர்.

ராஜௌரி கார்டன் தொகுதியின் பாஜக எம்எல்ஏவான மஞ்சிந்தர் சிங் சிர்சா, அதிகபட்சமாக ரூ.248.85 கோடி வரை சொத்துகள் இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த குறைந்த சொத்துமதிப்பு கொண்ட அமைச்சராக காரவால் நகர் தொகுதி எம்எல்ஏ கபில் மிஸ்ரா ரூ.1.06 கோடியுடன் கடைசி இடத்தில் உள்ளார்.

7 அமைச்சர்களின் சராசரி சொத்துமதிப்பு ரூ.56.03 கோடியாக உள்ளது. அனைத்து அமைச்சர்களும் அவர்கள் மீதான கடன்கள் குறித்தும் தெரிவித்துள்ளனர். அவர்களில் புதுதில்லி எல்எல்ஏவும் தில்லி துணை முதல்வருமான பர்வேஷ் ஷாகிப் வர்மாவுக்கு ரூ.74.36 கோடி கடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

7 அமைச்சர்களில் 6 பேர் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். ஒருவர் மட்டும் 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார்.

இதையும் படிக்க...முதல் பேரவைத் தேர்தலிலேயே முதல்வர் பதவி..! யார் இந்த ரேகா குப்தா?

சாலைகளிலுள்ள கழிவுகளை அகற்ற பொதுப்பணித்துறைக்குத் தில்லி அரசு உத்தரவு: ஆஷிஷ் சூட்

சாலைகளில் உள்ள சட்டவிரோத கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றத் தில்லி அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தில்லி அமைச்சர் ஆஷிஷ் சூட் தெரிவித்தார். இதுதொடர்பாக ஆஷிஷ் சூட் கூறுவதாவது, ரேகா குப்தாவ... மேலும் பார்க்க

பெற்றோர்களே உஷார்... குழந்தைகள் கண்காணிப்புக்கு நாளுக்கு ரூ. 10,000 சம்பளம்!

பெங்களூரில் பதின்ம வயது குழந்தைகளைக் கண்காணிப்பதற்கு தனியார் புலனாய்வு அதிகாரிகளை பெற்றோர்கள் நியமித்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் இருவரு... மேலும் பார்க்க

ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா? இதைச் செய்யாவிட்டால் சிக்கல்தான்!

ஒருவர் ஆதார் கார்டு, பான் கார்டு வைத்திருப்பது போல ஜிமெயில் வைத்திருப்பதும் அத்தியாவசியமாகிவிட்ட இந்தக் காலத்தில், வெறும் ஜிமெயில் கணக்கைத் தொடங்கிவிட்டால் மட்டும் போதாது.அதனை முறையாக பராமரிக்கவும் வே... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் சென்றவர்களின் கார் விபத்து: 4 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்குச் சென்றவர்களின் கார் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 பேர் சனிக்கிழமை அதிகாலை ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மா... மேலும் பார்க்க

மருத்துவமனை சிசிடிவி விடியோ வெளியான விவகாரம்: குற்றவாளிகளின் 22 டெலிகிராம் சானல்கள்!

மருத்துவமனையில் பெண்களை பரிசோதிக்கும் அறையில் இருந்த சிசிடிவியில் பதிவான விடியோக்களைத் திருடி அதனை விற்பனை செய்து வந்த சம்பவத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரையும் மகாராஷ்டிரத்தில் இரண்டு பேரைய... மேலும் பார்க்க

முதல்வருக்கு கொலை மிரட்டல்!

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பஜன்லால் ஷர்மாவிற்கு சிறைவாசி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.ஜெய்பூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று (பிப்.21) இரவு செல்போன் மூலம் அழைப்பு விடுத்த நபர் அம்ம... மேலும் பார்க்க