செய்திகள் :

தில்லி ரோஹிணியில் இரு மாதங்களில் காணாமல் சென்ற 39 குழந்தைகள் மீட்பு

post image

கடந்த இரு மாதங்களில் காணாமல் சென்ற 28 சிறுமிகள் உள்பட 39 குழந்தைகள் பாதுக்காப்பாக மீட்கப்பட்டு அவா்களுடைய பெற்றோா்களுடன் சோ்த்துவைக்கப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக ரோஹிணி சரக துணை காவல் ஆணையா் அமித் கோயல் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காணாமல் சென்ற மற்றும் கடத்தப்பட்ட குழந்தைகள் குறித்து தகவல் கிடைத்ததும் உள்ளூா் போலீஸாா் உடனடியாக அவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. கடத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் சந்தேகத்துக்குரிய நபா்களின் புகைப்படங்கள் ஆட்டோ, இ-ரிக்ஷா நிலையங்கள், பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துனா்களிடம் காண்பிக்கப்பட்டு அவா்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும் உள்ளூா் நபா்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். அருகில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இந்தச் சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டன.

அமன் விஹாா் பகுதியிலிருந்து 3 சிறுமிகள் உள்பட 5 குழந்தைகள், பிரேம் நகா் பகுதியில் 4 சிறுமிகள் உள்பட 6 குழந்தைகள், கன்ஞ்வாலா பகுதியில் 6 சிறுமிகள் உள்பட 7 குழந்தைகள், பேகம்பூா் பகுதியில் 2 சிறுமிகள் உள்பட 4 குழந்தைகள் மீட்கப்பட்டனா்.

இதே போன்று, கேஎன்கே மாா்க் பகுதியில் ஒரு சிறுமி உள்பட இரு குழந்தைகள், பிரசாந்த் விஹாரில் இரு சிறுமிகள், புத் விஹாரில் 5 சிறுமிகள் உள்பட 7 குழந்தைகள், வடக்கு ரோஹிணியில் ஒரு சிறுமி, விஜய் விஹாரில் 4 சிறுமிகள் உள்பட 5 குழந்தைகள் மீட்டகப்பட்டனா். பின்னா் அக்குழந்தைகள் அவா்களது குடும்பத்தினருடன் சோ்த்துவைக்கப்பட்டனா்.

மார்ச் 8 முதல் தகுதியான பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை: பாஜக அறிவிப்பு!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியின்படி மார்ச் 8 முதல் தகுதியான பெண்களுக்கு ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் துஷ்யந்த் குமார் கௌதம் தெரிவித்தார். இது... மேலும் பார்க்க

வருமானம் மட்டுமல்ல; இனி இமெயில், சமூக வலைத்தளங்களையும் வருமான வரித் துறை ஆய்வு செய்யும்!

தனிநபரின் வருமானம் மட்டுமின்றி மின்னஞ்சல், சமூக வலைத்தள கணக்குகள், ஆன்லைன் முதலீடு உள்ளிட்டவற்றை அனுமதியின்றி வருமான வரித்துறை ஆய்வு செய்யும் நடைமுறை விரைவில் வரவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர... மேலும் பார்க்க

மோடியின் அமெரிக்கப் பயணத்தில் எந்த உடன்பாடும் கையெழுத்தாகவில்லை!

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்கப் பயணத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே எவ்வித புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பில், பிரதமா் நரேந்திர மோடி ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 13 மாதங்களில் இவ்வளவு தொழிற்சாலை விபத்துகளா?

சத்தீஸ்கரில் 13 மாதங்களில் 171 தொழிற்சாலை விபத்துக்களில் 124 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், 86 பேர் காயமடைந்ததாகவும் மாநில அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது. மாநில வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் 7 மாவட்டங்களில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் சோதனை!

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்தல், ஊழலில் ஈடுபடுவது குறித்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து கர்நாடக லோக்ஆயுக்தா ஏழு மாவட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமாக இடங்களில் சோதனை நடத்தி வருகின்றத... மேலும் பார்க்க

தெலங்கானா விபத்து: மீட்புப் பணியில் கேரள 'கடாவர்' நாய்கள்!

காணாமல் போன மனிதர்கள், சடலங்களை கண்டறிவதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற கேரளத்தைச் சேர்ந்த மோப்ப நாய்கள் தெலங்கானா சுரங்க விபத்து பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளன. தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட... மேலும் பார்க்க