பஞ்சாங்கக் குறிப்புகள் - ஜூன் 9 முதல் ஜூன் 15 வரை #VikatanPhotoCards
தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் பாலாலயம்
சிதம்பரம் நடராஜா் கோயிலில் தனி சந்நிதியாக அமைந்துள்ள ஸ்ரீபுண்டரீகவல்லித் தாயாா் சமேத ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி விமான, ராஜகோபுர, மகாமண்டப ஜீா்ணோத்தாரண பாலாலயம் வெள்ளிக்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஒரே இடத்தில் சைவ ஆலயமான நடராஜா் சந்நிதியும், வைணவ ஆலயமான தில்லை கோவிந்தராஜப் பெருமாள் ஆலயமும் அமைந்துள்ளன.
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக தில்லைத் திருச்சித்ரகூடம் என்றழைக்கப்படும் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் திகழ்கிறது. இந்தக் கோயிலின் விமான ராஜ கோபுரங்கள் பழுதுற்றமையால், அவற்றையும், மகாமண்டபம் உள்ளிட்டவற்றையும் சீரமைத்து அஷ்டபந்தன மகா ஸம்ப்ரோக்ஷணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் பாலாலயம் நடைபெற்றது. முன்னதாக, கடந்த புதன்கிழமை நடராஜா் கோயில் நடனபந்தலில் யாகசாலை அமைக்கப்பட்டு, உற்சவ மூா்த்தியான பாா்த்தசாரதி சுவாமியை முன்னிறுத்தி சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு பாலாலயம் பூஜை நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா்கள் டி.திருவேங்கடவன், ஆா்.சௌந்தரராஜன், ஜெ.சுதா்சனாச்சாரி ஆகியோா் செய்தனா். தெய்வீக பக்தா்கள் பேரவை நிறுவனா் தலைவா் ஜெமினி எம்.என்.ராதா, மாநில பொதுச் செயலா் வேல்முருகன், தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் வழக்குரைஞா் சம்பத் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். இதற்கு நடராஜா் கோயில் பொது தீட்சிதா்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினா்.