செய்திகள் :

தி. நகரில் விதிமீறல் கட்டடத்தை உடனடியாக இடிக்க உத்தரவு! உயர்நீதிமன்றம்

post image

சென்னை தியாகராய நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடத்தை உடனடியாக இடிக்க சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தி நகர் பகுதியில் தரைத்தளம் மற்றும் மூன்று மாடிக்கு அனுமதி பெற்றுவிட்டு, 10 தளங்கள் கட்டிய தனியார் நிறுவனத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) நோட்டீஸ் வழங்கியது.

இதனைத் தொடர்ந்து, அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை வரன்முறை செய்யக் கோரி தனியார் நிறுவனம் சார்பில் சிஎம்டிஏவிடம் விண்ணப்பிக்கப்பட்டது.

ஆனால், அந்த விண்ணப்பத்தை சிஎம்டிஏ நிராகரித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் தரப்பில் முறையிடப்பட்டது.

இதையும் படிக்க : ‘கோ பேக் கவர்னர்’: உ.பி. பேரவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்!

இந்த வழக்கை விசாரித்த எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே. ராஜசேகர் அமர்வு, தனியார் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், திட்ட அனுமதியை மீறி கட்டப்பட்ட கட்டங்களுக்கு வரன்முறை செய்யக் கோரி தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களை ஏற்பதன் மூலம் சட்டவிரோத செயல் சட்டப்பூர்வமாகிறது எனத் தெரிவித்த நீதிபதிகள், பெருந்தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதை ஏற்று, இரக்கம் காட்டக் கூடாது என்று தெரிவித்தனர்.

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தின் பகுதிகளை 8 வாரங்களில் இடிக்க சிஎம்டிஏ மற்றும் சென்னை மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத... மேலும் பார்க்க

ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்: ‘பெல்’ நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொ... மேலும் பார்க்க