செய்திகள் :

தீபாவளிக்குப் பிறகான டில்லியின் கடும் புகை மூட்டம்; குறைந்தது எப்படி?

post image

டில்லியின் காற்று மாசுப் பிரச்னை ஆண்டுதோறும் தீபாவளிக்குப் பிறகு தீவிரமடையும். இம்முறை நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மாசு உச்சத்தைக் கடந்தது.

ஆனால், ஆச்சர்யமாக ஒரே நாளிலேயே காற்றின் தரம் மேம்பட்டது. இதற்கு அரசின் நடவடிக்கையல்ல, வானிலைச் சூழ்நிலையே காரணம் என நிபுணர்கள் கூறினர்.

காற்று மாசுபாடு

PM2.5 - நுண்ணிய தூசி துகள்கள் நுரையீரல் வழியாக ரத்தத்திற்குள் நுழைந்து ஆஸ்துமா, இதய நோய், நுரையீரல் சேதம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. தீபாவளி இரவில் டில்லியில் நுண்ணிய தூசி துகள்களான PM2.5-வின் அளவு 675 மைக்ரோகிராம் வரை உயர்ந்தது. இது உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு வரம்பைவிட 45 மடங்கு அதிகம்.

தீபாவளிக்குப் பிறகு மாசு திடீரென குறைந்ததற்கு அரசின் எந்தக் கொள்கையும் காரணமல்ல. மாறாக, மூன்று முக்கிய வானிலை மாற்றங்களே காற்றை இயற்கையாக சுத்தம் செய்ய உதவின.

முதலில், தீபாவளி இரவில் அமைதியாக இருந்த காற்று சில மணி நேரத்தில் திசைமாற்றம் பெற்று கிழக்கிலிருந்து பலமாக வீசத் தொடங்கியது. இந்த பலமான காற்றே புகை மற்றும் தூசியை டில்லியிலிருந்து வெளியேற்றியது.

பட்டாசு புகை
பட்டாசு புகை

இரண்டாவது, அக்டோபர் நடுப்பகுதியில் வந்த தீபாவளி காரணமாக வானிலை இன்னும் சற்று சூடாக இருந்தது. இதனால் காற்று மேலே கலக்கச் சுலபமாகி, மாசடைந்த காற்று தரையில் தங்காமல் மேலே பரவியது.

மூன்றாவது, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் கடந்த ஆண்டைவிட சுமார் 79 சதவிகிதம் குறைவான பயிர்க்கழிவுகள் எரிப்பு நடந்தது. இதனால் வெளிமாநில புகை தில்லியை அதிகமாக பாதிக்கவில்லை.

பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, “இன்னும் இரண்டு ஆண்டுகளில் தில்லியின் காற்று சுத்தமாகும்” என்றார். ஆனால், தில்லி காற்றை சுவாசிப்பது தினமும் 10 முதல் 30 சிகரெட்டுகளை புகைப்பதற்குச் சமம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தீபாவளிக்குப் பிறகு கிடைத்த சுத்தமான காற்று ஓர் அதிர்ஷ்டம் மட்டுமே. நீடித்த மாசுக் கட்டுப்பாடு நடவடிக்கைகளே டில்லியின் உண்மையான தீர்வாகும்.

சென்னை: பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஒதுங்கும் நுரை | Photo Album

Rain Updates: 'இந்த வாரம் முழுதும் மழை' - வடகிழக்கு பருவமழை தீவிரம்; எந்தெந்த மாவட்டங்களுக்கு Alert? மேலும் பார்க்க

சென்னை: தீபாவளி பட்டாசுகளால் புகை மூட்டம்; 400-ஐ தாண்டிய காற்று மாசுபாடு குறியீடு

தீபாவளி முடிந்துவிட்டது. நேற்று வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் நம்மைச் சுற்றிலும் ஏற்பட்ட புகை மூட்டத்தை நாமே நம் கண்களில் பார்த்திருப்போம்.சென்னையில் காற்று மாசுபாடு குறியீடு 400-ஐயும், கோவையில் காற்று ம... மேலும் பார்க்க

குன்னூர்: சாலையில் வழிந்தோடும் காளான் கழிவுநீர்; நோய்த்தொற்று அபாயத்தில் கூலி தொழிலாளர்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கோலணி மட்டம் பகுதி.நூற்றுக்கணக்கான விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் முறையான சாலை, ... மேலும் பார்க்க

கோவை: பட்டாசுகளால் அதிகரித்த மாசு; 221 AQI-ஐ தொட்ட காற்றின் மாசின் அளவு | Photo Album

கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவை... மேலும் பார்க்க