செய்திகள் :

துணை முதல்வர் நிகழ்ச்சி நடந்த இடத்தில், பைக்கில் வட்டமடித்து சத்தமிட்ட தவெக-வினர்... சேலம் சலசலப்பு!

post image

தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கொங்கு மண்டலம் இருந்து வருகிறது. ஏற்கெனவே கொங்கு மண்டலம் தனது கோட்டை என்று சொல்லி வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு செக் வைக்கும் விதமாக, தி.மு.க, தனது இளைஞர் அணி மாநாட்டை கடந்த ஆண்டு நடத்தி காண்பித்தது. அதேபோல சேலத்தில் பா.ஜ.க சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியே, சேலத்தின் அருமை பெருமையைப் பேசிவிட்டுச் சென்றார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல், கொங்கு மண்டலத்தை தி.மு.க தன்வசப்படுத்த காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலையில்தான், 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டன. இதில், புதிதாக அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டை கள்ளக்குறிச்சி மாவட்டம், விக்கிரவாண்டியில் நடந்தமுடிவு செய்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம்

அதற்கான முன்னேற்பாட்டு வேலைகள் ஒருபக்கம் நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடக்கக்கூடிய மாநாட்டுக்கு சேலம் மாவட்டம், ஆத்தூர் அம்மம்பாளையத்தில் ஆலோசனைக் கூட்டத்தை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடத்தினார். அதிலும், `நம்ம டார்கெட் கொங்கு மண்டலம்தான்' என்று கூறி, நிர்வாகிகளிடம், `மாநாட்டுக்கு கொங்கு மண்டலத்திலிருந்து பெருந்திரள் கூட்டம் வர வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில்தான் சேலத்திற்கு இன்று அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேலம் மாநகர பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள நேரு அரங்கத்திற்கு காலை வருகை புரிந்திருந்தார். துணை முதல்வராகி முதன்முறையாக சேலம் வருவதால், அனைத்துக் கட்சி நிர்வாகிகள், சட்ட உறுப்பினர்கள் என அனைவருக்கும் அழைப்பிதழ் விடுக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

உதயநிதி, விஜய்

அப்போது நிகழ்ச்சி நடைபெற்றுவந்த நேரு அரங்கம் அருகே த.வெ.க கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனத்தில் வட்டமிட்டபடி, துணை முதல்வர் கான்வாய் செல்லக்கூடிய நான்கு ரோடு பகுதியிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரையும் சத்தமிட்டுக்கொண்டு கொடியை அசைத்துக் காட்டி ஆரவாரத்துடன் வந்தனர். இதனால் அமைச்சர் நிகழ்ச்சிகளுக்காக வந்தவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

இது குறித்து காவல்துறை வட்டாரங்களில் பேசியபோது, “துணை முதல்வர் வருகையால் ப்ரோட்டோகால் அடிப்படையில்தான் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் த.வெ.க கட்சியினர் அனுமதி எதுவும் பெறாமல் துணை முதல்வர் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் சத்தமிட்டுச் சுற்றிவந்தது, அரசியலுக்காக வேண்டுமென்றே செய்தது போன்று தெரியவருகிறது. இதற்கு காவல்துறை சார்பில் எந்த அனுமதியும் அவர்கள் பெறவில்லை. எனவே, விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

மகாராஷ்டிரா தேர்தல்: தமிழருக்கு மீண்டும் வாய்ப்பு; 99 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்த பாஜக!

மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கு ஆளும் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்து ப... மேலும் பார்க்க

`மாவட்டத் தலைவர்கள் மாற்றம்?' - சத்தியமூர்த்தி பவனில் `புது' சலசலப்பு!

சொதப்பலில் முடிந்த நிர்வாகிகள் சந்திப்பு, பிசுபிசுத்துப் போன நடைப்பயணம் என தமிழக காங்கிரஸில் ஏற்கெனவே ஏகப்பட்ட சர்ச்சைகள் நிலவி வரும் சூழலில், 'தனது ஆதரவாளர்களை மாவட்ட தலைவர்களாக்க துடித்து வருகிறார்,... மேலும் பார்க்க

Train Accident : கவரப்பேட்டை ரயில் விபத்து ஒரு சதியா? - வெளியான `ஷாக்' தகவல்

திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை அருகே கடந்த 11-ம் தேதி கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து தர்பங்காவிற்கு செல்ல இருந்த ‘பாக்மதி எஸ்பிரஸ்’ ரயில் விபத்திற்குள்ளாகி இருந்தது.லூப் லைனில் நின்று கொண்டிருந்... மேலும் பார்க்க

`ஒரு மொழியை படி, படிக்காதே எனச் சொல்ல இங்கு யாருக்கும் உரிமை இல்லை!' - விஜய பிரபாகரன் கூறுவதென்ன?

``எந்த மொழியும் குறைவானது அல்ல, அவரவருக்கு அவரவர் மொழி பெரியது, நாம் அனைத்து மொழியையும் கற்றறிய வேண்டும்" என தே.மு.தி.க விஜய பிரபாகரன் கூறியிருக்கிறார்.தே.மு.தி.க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ... மேலும் பார்க்க

Vijay: "வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று..." - தவெக தலைவரின் இரண்டாவது கடிதம்

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் தலைவர் விஜய், தொண்டர்களுக்கான இரண்டாவது கடிதத்தை வெளியிட்டிருக்கிறார்.நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் ... மேலும் பார்க்க

India - Canada : மோசமடையும் இந்தியா - கனடா உறவு... இந்த விவகாரத்தில் லாரன்ஸ் பெயர் அடிபடுவது ஏன்?

லாரன்ஸ் பிஷ்னோய் என்றால் இன்றைக்கு பாலிவுட்டில் ஒரு அச்சம் ஏற்படும் அளவுக்கு நிலைமை உருவாகி இருக்கிறது. பஞ்சாப்பில் பாடகர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகளால் அச்சத்தில் வாழ்கின்றனர். இப்போது அதே நிலையை... மேலும் பார்க்க