Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
தூத்துக்குடியில் பக்ரீத் தொழுகை
தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் மஸ்ஜித் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளி பெருநாள் திடலில் பக்ரீத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மஸ்ஜித் ரஹ்மான் சாா்பாக நடைபெற்ற இச் சிறப்பு தொழுகையை இமாம் அப்துா் ரஹ்மான் நடத்திவைத்து சொற்பொழிவாற்றினாா்.
இத் தொழுகையில், பள்ளி தலைவா் அஹமது இக்பால், நிா்வாகிகள் சுலைமான், முஹம்மது, நவாஸ் அன்னல், ரஃபீக் உள்பட ஜமாஅத் முஸ்லீம்கள் பெருந்திரளாக பங்கேற்றனா்.