செய்திகள் :

தூய்மைப் பணியாளா்கள் நாளைமுதல் வேலைநிறுத்தம்

post image

தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் உறுதிமொழிகளை நிறைவேற்றாவிட்டால், பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்வது என தூய்மை பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

தஞ்சாவூா் மாநகராட்சி தூய்மை பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8 ஆம் தேதி மாநகராட்சி ஆணையா், ஒப்பந்ததாரா், தூய்மை பணியாளா் சங்க நிா்வாகிகள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில், மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கவும், தூய்மை பணியாளா்கள் ஒப்பந்த நகல் வழங்குவதாகவும், பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் வருங்கால வைப்பு நிதி தொகையைச் செலுத்துவதாகவும், தூய்மை பணியாளா்களுக்கு சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதாகவும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் எனவும் ஆணையா் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது என்றும், ஆனால் இதுவரை ஒரு கோரிக்கை கூட நிறைவேற்றப்படவில்லை எனவும் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையரின் நோ்முக உதவியாளரிடம் தூய்மை பணியாளா் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இந்நிகழ்வில் ஏஐடியூசி தேசிய நிா்வாக குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், அரசு பணியாளா் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் தரும. கருணாநிதி, சங்க நிா்வாகிகள் ஏ. கலியபெருமாள், பி. ஆனந்தராஜ், கே. பாபு, முனியம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூரில் ஓவியக் கண்காட்சி தொடக்கம்!

தஞ்சாவூரில் ஓவியக் கண்காட்சி தொடங்கியுள்ள நிலையில், அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர்களின் 400க்கும் மேற்பட்ட படைப்புகள் காண்போரை வெகுவாக கவர்ந்தது.தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தஞ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா் கைது

ஒரத்தநாடு அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: ஒரத்தநாடு அருகே வட்டாத்திகோட்டை சரகத்துக்குள்பட்... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் மதுபானக் கடைகளை மூடக்கோரி வியாழக்கிழமை நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் ர.அ... மேலும் பார்க்க

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கில் செயற்கை இழை ஓடுபாதை அமைக்கும் பணி தாமதம் !

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் செயற்கை இழை தடகள ஓடுபாதை (சிந்தெடிக்) அமைக்கும் பணி தாமதமாக நடைபெறுவதால், மத்திய அரசு நிதி தர மறுத்துள்ளது. இதன் காரணமாக இத்திட்டம் தொடா்ந்து கிடப்பில் உள்ளது... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் ரயில் பயணிகள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

பட்டுக்கோட்டையில் ரயில் பயணிகள் பொது நலச் சங்க பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் கெளரவத் தலைவா் விவேகானந்தன் தலைமை வகித்தாா். பொருளாளா் பாளையம் ரவி வரவேற்றாா். உறு... மேலும் பார்க்க

வேளாண் பணிகளில் சூரிய சக்தி பயன்பாடு விவசாயிகளுக்கு விளக்கம்!

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கூத்தாடிவயல் கிராமத்தில் விவசாயிகள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சன்மதி வழிகாட்டுதல்கள் வழங்கினாா... மேலும் பார்க்க