செய்திகள் :

தென்காசி: முதல்வர் வருகையின் போது மோசடியாக இலவச பட்டா? - மேலகரம் பெண்கள் புகாரின் பின்னணி என்ன?

post image

முதல்வர் வருகையின் போது மோசடியாக இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், தகுதி உள்ள நபர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கவில்லையென்றால் முதல்வர் வருகையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மேலகரம் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த பெண்கள் எச்சரித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மஜரா குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரக்கூடிய நிலையில் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இதனை நினைவூட்டும் விதமாக இன்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

மனு அளித்த பெண்கள்
மனு அளித்த பெண்கள்

இந்தக் கோரிக்கை மனு குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறுகையில், "தங்கள் பகுதிகளில் சொந்த வீடு உள்ளவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. உரிய விசாரணை இல்லாமல் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்வதோடு, வேலை இல்லாமல், போதிய வருமானம் இல்லாமல் திண்டாடக்கூடிய தங்களுக்கு வீடு மனை பட்டாக்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மோசடியாக புறம்போக்கு என்று சொல்லி பணம் பெற்றுக் கொண்டு முதல்வர் நிகழ்ச்சியில் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது குறித்து உரிய நடவடிக்கை இல்லை எனில் நாளை தென்காசி வருகை தரவுள்ள முதல்வர் மு.க ஸ்டாலினைச் சந்தித்து கோரிக்கை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அப்பகுதி பெண்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பீகார் தேர்தல் 2025: ஹெலிகாப்டர்களில் சூறாவளி பிரசாரம்; எகிறும் தேர்தல் செலவுகள்!

2025 பீகார் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட (121 தொகுதிகள்) வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளன.இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு (12... மேலும் பார்க்க

‘22% ஈரப்பதம்’ நெல் கொள்முதல் எனும் தேசிய நாடகம்... கைதட்டும் தி.மு.க; கும்மியடிக்கும் பா.ஜ.க!

அனைவருக்கும் பசுமை வணக்கம்...‘கழுதைக்கு வாக்கப்பட்டுட்டு... உதைக்கு அஞ்சலாமா’ என்கிற பழமொழி போல்தான் இருக்கிறது, உழவர்களின் வாழ்க்கை. நாட்டுக்கே படியளக்கும் தங்களை, ‘மக்களாட்சி’ என்கிற பெயரில் ஆண்ட/ஆண... மேலும் பார்க்க

அமெரிக்கா: உடல் பருமன், சர்க்கரை நோய்‌ உள்ளவர்களுக்கு 'நோ' விசா; ட்ரம்ப்பின் புதிய கெடுபிடி என்ன?

அமெரிக்கா விசா வழங்குவதற்கு மேலும் புதிய கெடுபிடிகளை விதித்துள்ளது ட்ரம்ப் அரசு.நூறு, ஆயிரக் கணக்கிலான டாலர்கள் மதிப்புள்ள மருத்துவச் சிகிச்சை அல்லது மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு இனி விசா வழங்க ... மேலும் பார்க்க

"உதயநிதியின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது இதுதான் ஞாபகம் வருகிறது" - மு.க ஸ்டாலின் பெருமிதம்

இன்று திமுகவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உதயநிதியின் செயல்பாடுகளைப் பார... மேலும் பார்க்க

"ஸ்டாலின் இடத்திற்கு உதயநிதி வருவார்; ராஜேந்திர சோழன் போல ஆட்சி செய்வார்" - துரைமுருகன் பேச்சு

இன்று திமுகவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது.இதில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், "ஸ்டாலினுக... மேலும் பார்க்க

ஊட்டி: "அண்ணா பெயரைக் கெடுக்கவே முறைகேடாக போட்டிகளை நடத்துகின்றனர்" - பெண்கள் புகாரின் பின்னணி என்ன?

அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கடந்த செப்டம்பர் மாதம் முதல் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ... மேலும் பார்க்க