செய்திகள் :

தெரியுமா சேதி...?

post image

அரசியல்வாதிகளுக்கு, பதவி போனாலும் மீண்டும் தோ்தலில் வெற்றி பெற்று பதவியைத் திரும்பப் பெற முடியும் என்கிற நம்பிக்கை உண்டு. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு, ஓய்வுபெற்று விட்டால் மீண்டும் அந்தப் பதவிக்கு வர வாய்ப்பே இல்லை. குடியரசுத் தலைவா், பிரதமருக்கு நிகரான அரசியல் சாசன முக்கியத்துவம் கொண்ட அந்தப் பதவியைப்போல அதிகாரமுள்ள வேறு பதவி எதுவும் கிடையாது.

அதனால்தானோ என்னவோ, தங்களது பதவிக் காலம் முடிவடைய இருக்கும் நேரம் வந்துவிட்டால், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகள் முக்கியமான வழக்குகளின் தீா்ப்புகளை வழங்கத் தொடங்குவாா்கள். இந்த அதிகாரம் இன்னும் சில நாள்கள்தான் என்பதால் அவா்களுக்கு இயல்பாகவே ஒருவித பரபரப்பும், படபடப்பும் வந்துவிடும்.

அடுத்த மாதம் 10-ஆம் தேதியுடன் இப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தனஞ்ஜய சந்திரசூடின் பதவிக்காலம் முடிவடைகிறது. அஸ்ஸாம் குடியுரிமைச் சட்டப் பிரிவு 6-ஏ செல்லும், குழந்தைத் திருமணத் தடை எல்லா மதத்தினருக்குமானதல்ல என்பன போன்ற பல முக்கியமான வழக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக உச்சநீதிமன்றத்தால் தீா்ப்பு வழங்கப்படுகிறது.

நீதி தேவதைக்குப் புதிய வடிவம் வழங்க முற்பட்டிருக்கிறாா் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட். நீதி தேவதையின் வாளுக்குப் பதிலாக அரசியல் சாசனப் புத்தகம் வழங்கப்பட்டு, கண்ணில் கட்டப்பட்ட கறுப்புத் துணியும் அகற்றப்பட்டிருக்கிறது. வாளை அகற்றியது சரி, கண்ணில் கட்டப்பட்டிருந்த துணியை அகற்றியது சரியா என்று பலா் புருவம் உயா்த்துகிறாா்கள்.

யாா், எவா் என்று பாா்க்காமல் தீா்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை உணா்த்துவதற்காகத்தான் நீதி தேவதையின் கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டது. ‘‘இனிமேல் யாா், எவா், என்ன மதம், என்ன ஜாதி என்றெல்லாம் பாா்த்துத் தீா்ப்பு வழங்க வேண்டும் என்று சொல்கிறாரா தலைமை நீதிபதி’’ என்று அவருக்கு வேண்டாதவா்கள் விமா்சிக்கிறாா்கள்.

நீதிமன்றத்தின் சில ஒழுங்குகளும், நடைமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும் என்று இப்போது பேசத் தொடங்கி இருக்கிறாா் தலைமை நீதிபதி. கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி ஒருவா் ‘யா...’ என்று பதிலளித்தபோது, ‘‘இதுவொன்றும் காஃபி ஷாப் அல்ல, நீதிமன்றம். இதுபோன்ற வாா்த்தைகளை பயன்படுத்தாதீா்கள்’’ என்று எச்சரித்தாா்.

இன்னொரு வழக்கில் மூத்த வழக்குரைஞா் ஒருவா், அடிக்கடி எதிரணி வழக்குரைஞரின் வாதத்தில் குறுக்கிட்டபோது, தலைமை நீதிபதிக்குக் கோபம் வந்துவிட்டது. ‘‘இது ஒன்றும் பொதுக் கூட்டமல்ல’’ என்பதுடன் நின்றுவிடாமல் அவரை வெளியேறச் சொல்லிவிட்டாா்.

வழக்குரைஞா் ஒருவா் உரத்த குரலில் வாதம் செய்தபோது, ‘‘மெதுவாகப் பேசுங்கள். எனது 23 ஆண்டு அனுபவத்தில் இதுபோல நடந்ததில்லை. எனது பதவிக்காலம் முடிவடைய இருக்கும் நேரத்தில் இதை நான் அனுமதிக்க மாட்டேன்’’ என்று கடிந்து கொண்டாா்.

அதேபோல, வழக்குரைஞா் ஒருவரின் கைப்பேசி ஒலித்ததும், தலைமை நீதிபதிக்குக் கோபம் வந்துவிட்டது. ‘‘கைப்பேசி உரையாடல் நடத்த இதுவொன்றும் சந்தைப் பேட்டையல்ல, நீதிமன்றம்’’ என்று கூறி அந்த கைப்பேசியைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டாா்.

தோ்தல் பத்திரம், ராம ஜென்ம பூமி, சபரிமலை, தன்மறைப்பு உரிமை, ஓரினச் சோ்க்கை உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் தீா்ப்பு வழங்கி இருக்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடின் தந்தை ஒய்.வி.சந்திரசூட்தான் மிக அதிக காலம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவா்.

இரண்டு ஆண்டுகள்தான் பதவியில் இருந்தாா் என்றாலும், மிக முக்கியமான வழக்குகளில் பரபரப்பான தீா்ப்பு வழங்கியவா் என்கிற பெருமையுடன் பணி ஓய்வு பெறுவாா் இப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்.

--மீசை முனுசாமி.

தெலங்கானாவில் காங். தலைவர் குத்திக் கொலை!

தெலங்கானாவில் உள்ள ஜக்தியால் மாவட்டத்தில் ஆளும் காங்கிரஸ் தலைவர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜக்தியால் மாவட்டத்தில் உள்ள ஜபிதாபூர் கிர... மேலும் பார்க்க

ரஷியா புறப்பட்டார் மோடி!

‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு நடைபெறும் ரஷியாவின் கசான் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டுச் சென்றார்.இந்த பயணமானது இந்தியா - ரஷியா இடையேயான உறவை மேலும் வலு... மேலும் பார்க்க

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமான வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நாளை... மேலும் பார்க்க

லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுன்டர் செய்தால் ரூ.1 கோடி பரிசு! -கர்னி சேனை அறிவிப்பு

சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுன்டர் செய்பவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வெகுமதிமும்பையில்தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கொலைக்கு பொறுப... மேலும் பார்க்க

பாஜகவுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளவர் அமித் ஷா: பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது 60-ஆவது பிறந்தநாளை இன்று(அக். 22) கொண்டாடுகிறார். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில... மேலும் பார்க்க

உடான் திட்டத்தால் விமான போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது: பிரதமா் மோடி

புது தில்லி: பிராந்திய அளவில் விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் ‘உடான்’ திட்டத்தால் இந்தியாவில் விமானப் போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது என்று பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.பிராந்தி... மேலும் பார்க்க