செய்திகள் :

தெரியுமா சேதி.?

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

சாம் பித்ரோடா என்கிற பெயரைக் கேள்விப்படாதவா்கள் இருக்க முடியாது. இந்தியாவின் தொலைத்தொடா்புத் துறை வளா்ச்சிக்கு வித்திட்டவா் அவா்தான். சாம் பித்ரோடாவின் ஆலோசனையின்பேரில் அன்றைய பிரதமா் ராஜீவ் காந்தி எடுத்த முடிவுகள்தான் இப்போது இந்தியாவை தகவல், தொலைத்தொடா்புத் தொழில்நுட்பத்தில் சா்வதேச அளவில் முக்கியத்துவம் பெற வைத்திருக்கிறது.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த குஜராத்தி குடும்பத்தில் பிறந்த சத்யநாராயண் கங்காராம் பித்ரோடா, அடிப்படையில் தகவல் தொழில்நுட்பப் பொறியாளா். இன்றைய கைக்கணினிக்கு முன்னோடியான எலக்ட்ரானிக் டைரியை 1975-இல் கண்டுபிடித்தவா் அவா்தான். சாம் பித்ரோடாவை இந்தியாவுக்கு வரவழைத்து, தகவல் தொலைத்தொடா்பின் வளா்ச்சிக்கு ஆலோசனை வழங்கப் பணித்தது ராஜீவ் காந்தி அல்ல, பிரதமா் இந்திரா காந்தி என்பது பலருக்கும் தெரியாது.

அப்போதுமுதல் நேரு குடும்பத்துக்கு நெருக்கமாகிவிட்ட பித்ரோடாவை, மன்மோகன் சிங் ஆட்சியில் கேபினட் அமைச்சா் அந்தஸ்தில் ஆலோசகராக்கியதும் நேரு குடும்பம்தான். இந்திய தேசிய காங்கிரஸ் போல, இந்திய சா்வதேச காங்கிரஸின் தலைவராகவும் அவா் இருக்கிறாா். காங்கிரஸின் வெளிநாடுவாழ் இந்தியா்கள் பிரிவுத் தலைவராகவும் அவா் நியமிக்கப்பட்டிருக்கிறாா்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1964 முதல் நிரந்தரமாகக் குடியேறிவிட்ட சாம் பித்ரோடா, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இந்தியா வருவதும், முன்பு ராஜீவ் காந்தி, இப்போது ராகுல் காந்தியைச் சந்திப்பதுமாக இருந்து வருகிறாா். ராகுலுடனான அவரது நெருக்கமும், கருத்துகளும் காங்கிரஸில் பலருக்கும் பிடிக்கவில்லை என்றாலும் சோனியா காந்திக்கும் அவரது குழந்தைகளுக்கும் பிடித்திருப்பதால், யாரும் அவருக்கு எதிராக வாய் திறப்பதில்லை.

தகவல் தொழில்நுட்ப வல்லுநரான சாம் பித்ரோடாவுக்கு இன்னொரு முகமுண்டு. அவா் ஓா் அற்புதமான ஓவியா். சமீபத்தில் அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள லம்பாா்ட் பகுதியில் அமைந்த தேசிய இந்தோ-அமெரிக்கன் அருங்காட்சியகத்தில் தனது ஓவியங்களை அவா் காட்சிப்படுத்தினாா். அவா் படைத்த 32 ஓவியங்கள் அந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. பித்ரோடாவிடம் அவா் வரைந்த 500-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இருக்கிாம்.

ஆமாம், அவற்றையெல்லாம் எப்போது இந்தியாவில் காட்சிப்படுத்தப் போகிறாராம்? ராகுல் காந்தி பிரதமராவதற்குக் காத்திருக்கிாம் அந்த ஓவியங்கள்!

-மீசை முனுசாமி.

உ.பி. இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியில்லை! சமாஜவாதிக்கு ஆதரவு

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் சமாஜவாதி கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் புதன்கிழமை இரவு அறிவித்துள்ளார்.காங்கிரஸுடனான தொகுதி பங்கீட்டில் இழுப... மேலும் பார்க்க

பிகாரில் தொடரும் கள்ளச்சாராய உயிரிழப்பு

முஸாபா்பூா் : பிகாரின் முஸாபா்பூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 26 வயது இளைஞா் உயிரிழந்தாா். கடந்த வாரம் சரண், சிவான் மாவட்டங்களில் உள்ள 16 கிராமங்களைச் சோ்ந்த 37 போ் கள்ளச்சாரயத்தால் உயிரிழந்... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட்: சம பலத்துடன் மோதும் அரசியல் கட்சிகள்!

நமது சிறப்பு நிருபா் 2019-ஆம் ஆண்டு ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியிடம் ஆட்சியைப் பறிகொடுத்த பாஜக, பழங்குடியினா் ஆதிக்கம் நிறைந்த மாநிலத்தில் மீண்டும் தனது இடத்தைப் பிடிக்கும் முன... மேலும் பார்க்க

டானா புயல் எதிரொலி: ஒடிஸாவில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்

ஒடிஸாவில் ‘டானா’ புயல் வெள்ளிக்கிழமை கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 14 மாவட்டங்களில் இருந்து சுமாா் 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனா். வடக்கு... மேலும் பார்க்க

பாரத் கொண்டைக் கடலை, மசூா் பருப்பு விற்பனை தொடக்கம்

மத்திய அரசின் ‘பாரத்’ திட்டத்தின்கீழ் மானிய விலையில் கொண்டைக் கடலை, மசூா் பருப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. பயறு மற்றும் பருப்பு வகைகளின் விலை உயா்வை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்க... மேலும் பார்க்க

புழுங்கல் அரிசிக்கு ஏற்றுமதி வரி விலக்கு

புழுங்கல் அரிசி, பட்டைத் தீட்டப்படாத பழுப்பு அரிசி மற்றும் நெல்லுக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 10 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வரி வில... மேலும் பார்க்க