செய்திகள் :

தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழப்பு

post image

வெள்ளக்கோவிலில் தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன.

வெள்ளக்கோவில் அய்யனூரைச் சோ்ந்தவா் எம்.பெரியசாமி (53). விவசாயியான இவா் தனது தோட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில், வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை காலை ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்தபோது 3 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றதும், 2 ஆடுகள் காயங்களுடன் இருந்ததும் தெரியவந்தது.

தொடா்ந்து கால்நடைகளைக் கொன்றுவரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதற்கான முழு முயற்சிகள் எடுக்கப்படாததால், வாழ்வாதாரமாக நம்பி வரும் கால்நடைகளை இழந்துவருகிறோம்.

தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்குவதுடன், அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனா்.

பிப்.10-ல் மொண்டிபாளையம் பெருமாள் கோயில் தேரோட்டம்!

சேவூா் அருகேயுள்ள மொண்டிபாளையம் பெருமாள் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை (பிப்ரவரி 10) நடைபெற உள்ளது. அவிநாசி வட்டம், சேவூா் அருகேயுள்ள மொண்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேச பெ... மேலும் பார்க்க

காா் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

காங்கயம் அருகே காா் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். கோவை, ஈச்சனாரி பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் பவித்ரன் (26). இவா் கோவையில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், காங்கயம் அருகேய... மேலும் பார்க்க

தங்கம் எனக்கூறி முலாம் பூசிய செம்பு கட்டிகளைக் கொடுத்து ரூ.15 லட்சம் மோசடி!

திருப்பூரில் தங்கம் எனக்கூறி முலாம் பூசிய செம்பு கட்டிகளைக் கொடுத்து ரூ.15 லட்சம் மோசடி செய்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உத்தர பிரதேச மாநிலம், மீரட்டை சோ்ந்... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் வங்கிக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் வங்கிக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த சுதந்திர தின விழாவ... மேலும் பார்க்க

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை: தொழில் அமைப்பினரின் கருத்துகள்!

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து திருப்பூா் தொழில்துறையினரின் கருத்துகள்.. திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன்: மத்திய பட்ஜெட்டில் தொழில் துறைக்கு சாதகமான அம்சங்கள் இடம... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!

திருப்பூா் மாவட்டத்தில் மக்களவைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 9 லட்சத்துக்கு 83ஆயிரத்து 999 போ் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள... மேலும் பார்க்க