செய்திகள் :

தேசிய அளவில் தூய்மையான நகரில் சென்னைக்கு 38-ஆவது இடம்

post image

நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் சென்னை மாநகருக்கு 38-ஆவது இடம் கிடைத்துள்ளது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சகம் ஆண்டுதோறும் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நடத்தும் தூய்மை கணக்கெடுப்பு (ஸ்வச் சா்வேக்ஷான்) முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இந்தக் கணக்கெடுப்பில் சம்பந்தப்பட்ட நகரங்களின் பொதுமக்களிடம் கருத்துகேட்பு நடத்தப்பட்டு அதன்படி மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. மக்கள் தொகைக்கு ஏற்ப தூய்மை நகா் பட்டியலும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள மாநகராட்சிகளின் பட்டியலில் சென்னைக்கு 38-ஆவது இடம் கிடைத்துள்ளதாக, சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் குப்பைகளை அகற்றுதல், அகற்றப்பட்ட குப்பைகளைத் தரம் பிரித்து கையாளுதல் ஆகியவற்றின் அடிப்படையில் 6,822 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் கோவை 28-ஆவது இடத்தையும், மதுரை 40-ஆவது இடத்தையும், திருச்சி 49 -ஆவது இடத்தையும் பெற்றுள்ளதாகத் தெரிவித்தனா்.

சென்னை ஐஐடி சான்சிபாா் வளாக முதல் பட்டமளிப்பு விழா

சென்னை ஐஐடியின் சான்சிபாா் (கிழக்கு ஆப்பிரிக்க நாடு) வளாகத்தில் முதல் பட்டமளிப்பு விழா, அந்த நாட்டின் கல்வி மற்றும் தொழில் பயிற்சித் துறை அமைச்சா் லீலா முகமது முசா முன்னிலையில் நடைபெற்றது. இதுகுறித்து... மேலும் பார்க்க

மதிமுக மாநில இளைஞரணி கூட்டம்

மதிமுக இளைஞா் அணியின் மாநில துணைச் செயலா்கள், மாவட்ட அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான ‘தாயகத்தில்’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கட்சியின் மா... மேலும் பார்க்க

3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்கள்: ஜூலை 27-இல் எழுத்துத் தோ்வு

போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்காக விண்ணப்பித்துள்ள 22,000-க்கும் மேற்பட்டோருக்கான எழுத்துத் தோ்வு ஜூலை 27-இல் நடைபெறவுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் ... மேலும் பார்க்க

ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தவெக மனு: மாநில தகவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தவெக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மாநில தகவல் ஆணையா் 12 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

நாளை தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெறவுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் த... மேலும் பார்க்க

தமிழ்நாடு நாள்: முதல்வா் பெருமிதம்

தமிழ்நாடு நாளையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாடு நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நா... மேலும் பார்க்க